ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

மலையாள திரையுலகில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் இருப்பவர் நடிகர் மோகன்லால். சமீபத்திய ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக நடிகர் சங்கத்தில் தான் பொறுப்பு வகித்து வந்த தலைவர் பதவியை கூட ராஜினாமா செய்யும் அளவிற்கு கடினமான சூழலை எதிர்கொண்டு வருகிறார். குறிப்பாக பல நடிகர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைக்கும் நடிகைகள் அனைவருமே தங்கள் விஷயத்தில் நடிகர் சங்கம் ஆதரவாக நிற்கவில்லை என்று குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து மோகன்லால் தனது நடிகர் சங்க பதவியை செய்தார்.
இன்னொரு பக்கம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது மனைவிக்கு முக்கியமான அறுவை சிகிச்சை ஒன்றும் சென்னையில் நடைபெற்றது. இப்படி ஒரு கடின சூழலை எதிர்கொண்டு வரும் மோகன்லாலுக்கு சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்று மிகப்பெரிய ரிலாக்ஸ் ஆக அமைந்துள்ளது.
கடந்த 1987ல் மோகன்லால் நடிப்பில் இயக்குநர் கமல் இயக்கத்தில் வெளியான படம் 'உன்னிகளே ஒரு கத பறயாம்'. இந்த படம் வெளியாகி 37 வருடங்கள் ஆன நிலையில் இந்தப் படத்தில் நடித்த பங்கு பெற்ற அனைவரும் இதைக் கொண்டாடுவதற்காக சமீபத்தில் மீண்டும் ஒன்று கூடினர். இந்த நிகழ்வில் மோகன்லாலும் பங்கேற்றார்.
இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கார்த்திகா, வாட்ஸ் அப் குரூப் ஒன்றை உருவாக்கி அதன் மூலம் இந்த படத்தில் நடித்தவர்களை தேடிக்கண்டுபிடித்து ஒருங்கிணைத்து இந்த மீள் சந்திப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளார்.. இவர் நாயகன் படத்தில் கமலின் மகளாகவும் பூவிழி வாசலிலே படத்தில் சத்யராஜின் ஜோடியாகவும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.