25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
நடிகை ஸ்ரேயா சரண் ஒரு காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய சினிமாவில் உள்ள பெரும்பாலான முன்னனி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர். திருமணத்திற்கு பிறகு ஸ்ரேயா படங்களில் நடிப்பதில் இருந்து விலகினார். நீண்ட வருடங்களுக்கு பிறகு ஸ்ரேயா மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தனது 44வது படத்தில் நடிக்கிறார். இதில் பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், சுஜித் ஷங்கர் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர். இப்போது இந்த படத்தில் ஒரு சிறப்பு பாடல் இடம் பெறுகிறது. இதில் சூர்யாவுடன் இணைந்து ஸ்ரேயா நடனமாடுகிறாராம். இதன் மூலம் முதன்முறையாக சூர்யா படத்தில் ஸ்ரேயா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.