பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி | இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களுக்குள் இவ்வளவு ஒற்றுமையா? | முக்கிய நிபந்தனையுடன் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு திரும்பும் கிச்சா சுதீப் | '2018' பட இயக்குனரின் டைரக்ஷனில் கதாநாயகியாக அறிமுகமாகும் மோகன்லாலின் மகள் | தான் படித்த கல்லூரியின் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற மம்முட்டியின் வாழ்க்கை வரலாறு |
'பாகுபலி' படத்திற்குப் பின்பு பான் இந்தியா நடிகராக உயர்ந்தார் தெலுங்கு நடிகர் பிரபாஸ். அதற்குப் பின் அவர் நடிப்பில் சில படங்கள் வந்தாலும் அவை பெரிய வெற்றியையும், வசூலையும் குவிக்கவில்லை. ஆனால், சில வாரங்கள் முன்பு வெளிவந்த 'கல்கி 2898 ஏடி' படம் அந்தக் குறையைத் தீர்த்து வைத்தது. அப்படம் 1000 கோடி வசூலைத் தாண்டியது.
இந்நிலையில் ஹிந்தி நடிகரான அர்ஷத் வர்ஷி சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபாஸை 'ஜோக்கர்' எனக் குறிப்பிட்டுப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “கல்கி 2898 ஏடி படம் எனக்குப் பிடிக்கவில்லை. அமிதாப்ஜி நம்பமுடியாமல் இருந்தார். அவரை புரிந்து கொள்ள முடியவில்லை. அவரைப் போன்ற சக்தி என்னிடம் இருந்தால் நமது உயிர் போய்விடும். அவரது கதாபாத்திரம் உண்மையாக இல்லை. பிரபாஸ், நான் உண்மையில் வருந்துகிறேன். அவர் படத்தில் ஜோக்கர் போல இருந்தார். நான் 'மேட் மேக்ஸ்' பார்க்க விரும்பினேன், நான் மேல் கிப்சனை அங்கு பார்க்க விரும்பினேன். அவர் ஏன் இப்படிச் செய்தார் என்பது எனக்குப் புரியவில்லை,” எனத் தெரிவித்துள்ளார்.
அவரது பேட்டியில் தெரிவித்த கருத்துக்கள் பிரபாஸ் ரசிகர்களையும், தெலுங்கு திரையுலகினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதனால் கடும் சர்ச்சை எழுந்துள்ளது. தனது கருத்துக்கு அர்ஷத் வர்ஷி வருத்தம் தெரிவிப்பாரா என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.