பிளாஷ்பேக் : சோக ராகங்கள் கூட சுக ராகங்களாக மாறும் எம்ஜிஆரின் பாடல்கள் | செப். 20ல் வேட்டையன் பட இசை வெளியீட்டு விழா | கார்த்தி 29வது படத்தை இயக்கும் டாணாக்காரன் பட இயக்குனர் | மீண்டும் இணைந்த செல்வராகவன் - ஜி.வி. பிரகாஷ் கூட்டணி! | மூக்குத்தி அம்மன் 2வை இயக்கும் சுந்தர் சி | ஜானி மாஸ்டரை கட்சியிலிருந்து நீக்கிய ஜனசேனா கட்சி | 'குட் பேட் அக்லி' படத்தில் விஜய்யின் வசனத்தை பேசி நடிக்கும் அஜித்! | அசோக்செல்வன் எப்படிப்பட்டவர்? உடைத்து பேசிய கீர்த்தி பாண்டியன்! | பாலிவுட்டில் வில்லனாக என்ட்ரி கொடுக்கும் சூர்யா? | 7 மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் லால் சலாம்! |
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின் போது இந்திய குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில், குடியரசுத் தலைவரால் 'அட் ஹோம்' என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கொடியேற்று நிகழ்ச்சிக்கு பிறகு அன்று மாலை நடக்கும் விருந்து நிகழ்ச்சியாகும்.
இதில் மூத்த அரசியல்வாதிகள், இராணுவ அதிகாரிகள், மற்றும் பிற குறிப்பிடத்தக்க பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் குச்சிப்புடி நடனக் கலைஞரும், தெலுங்கு நடிகையுமான சந்தியா ராஜூ கலந்து கொள்ள இருக்கிறார். இதற்கான ஜனாதிபதியின் அழைப்பை அரசு அதிகாரிகள் அவரை சந்தித்து வழங்கினார்கள்.
சந்தியா ராஜூ தனது முதல் தெலுங்குத் திரைப்படமான 'நாட்டியம்' படத்திற்காக இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றவர் . இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராம்கோ குழுமத் தலைவர் தொழிலதிபர் பி.ஆர். வெங்கட்ராம ராஜாவின் மகள். ஐதராபாத்தில் உள்ள நிஷ்ரிங்கலா டான்ஸ் அகாடமி மற்றும் நிஷ்ரிங்கலாபிலிம்ஸின் நிறுவனராகவும் சந்தியா ராஜூ உள்ளார்.