காதல், கனவுகள், மனித தொடர்புகளை 'தோ தீவானே சேஹர் மெய்ன்' பேசும் : மிருணாள் தாக்கூர் | தயாரிப்பாளர்களை குழியில் தள்ளும் இயக்குனர்கள் : சேரன் பரபரப்பு பேச்சு | விஜய் பட நடிகைக்கு நேரில் ஆஜராக நீதிமன்றம் பிடி வாரண்ட் | மம்முட்டி வாங்கி கொடுத்த 'ஹியரிங் எய்டு' கருவியை கழட்டி வீசிய தொழிலாளி | 'டூரிஸ்ட் பேமிலி' பாணி கதையில் ஹிந்தியில் நடிக்கும் பிரியாமணி | நானாக வாய்ப்பு கேட்ட ஒரே இயக்குனர் இவர்தான் ; மிருணாள் தாகூர் | பிளாஷ்பேக் : அக்கா அளவுக்கு சாதிக்க முடியாமல் போன தங்கை | சினிமாவிற்கு வரும் புதிய இரட்டை இசை அமைப்பாளர்கள் | 10 கோடி செலுத்த காலஅவகாசம் கேட்ட விஷால் மனு தள்ளுபடி | கடும் போட்டியில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் |

நடிகர் விஷால், தனுஷ் உள்ளிட்டோருக்கு ரெட் கார்டு, ஆக.,16 முதல் புதிய திரைப்படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு முடிவுகளை தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்தது. இது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் இன்று (ஆக.,11) நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், துணை தலைவர் பூச்சி முருகன், பொருளாளர் கார்த்தி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது: இது மாதம் மாதம் நடக்கும் செயற்குழு கூட்டம் தான். படப்பிடிப்பை நிறுத்துவதாக தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது தொடர்பாக அவர்களிடம் தான் கேட்க வேண்டும். இது குறித்து தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்போம். அவர்களுடன் எங்களுக்கு எந்தவித பிரச்னையும் இல்லை. இவ்வாறு கூறினர்.




