கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக பிரியா பவானி சங்கர் வலம் வருகிறார். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி உடன் ‛டிமான்டி காலனி 2' படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்தபடம் அடுத்தவாரம் ஆக., 15ல் ரிலீஸாக உள்ளது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‛ரத்னம், இந்தியன் 2' ஆகிய படங்கள் தோல்வி அடைந்ததுடன் அவரின் நடிப்பு பற்றியும் நிறைய கேலி, கிண்டல் வலைதளங்களில் வந்தன.
இதுபற்றி அவர் கூறுகையில் ‛‛சிரித்துக் கொண்டே ஒருவரை திட்டுவது எப்படி என எனக்கு புரியவில்லை. ஒருவரை அதிர்ஷ்டமில்லாதவர் என கூறுவது சரியானது அல்ல. அது அவரையும், அவரை பெற்றவர்களையும் பாதிக்கும். படங்கள் சரியாக போகவில்லை என ஹீரோவை பார்த்து யாராவது அதிர்ஷ்டமில்லாதவர் என கூறியது உண்டா. இதுவும் ஒருவகையான ஆணாதிக்கம் தான். பெரிய படங்கள் எனக்கு அதிர்ஷ்டத்தால் வரவில்லை, திறமையால் வந்தது'' என்றார் பிரியா பவானி சங்கர்.