லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! | 48 வயதில் கன்றாவியான ரிலேஷன்ஷிப் : மீண்டும் ஒரு ஏமாற்றத்தில் புலம்பிய சுசித்ரா | ‛கோர்ட்' பட ரீமேக்கில் இணையும் அடுத்த பிரபலங்கள் | கதை நாயகன் அவதாரத்திற்கு தயாராகி வரும் பால சரவணன்! | நான் இந்திய சினிமாவின் ரசிகன்: ஹாலிவுட் ஸ்டன்ட் மாஸ்டர் | ஐடி ஊழியர் கடத்தி, தாக்குதல் : நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு | 25 ஆண்டுகளுக்குபின் வடிவேலு, பிரபுதேவா கூட்டணி: முன்னே மாதிரி வொர்க் அவுட் ஆகுமா? | 'வீரவணக்கம்' பட புரமோஷனில் கலந்துகொள்ளாத சமுத்திரக்கனி |
தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக பிரியா பவானி சங்கர் வலம் வருகிறார். அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி உடன் ‛டிமான்டி காலனி 2' படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இந்தபடம் அடுத்தவாரம் ஆக., 15ல் ரிலீஸாக உள்ளது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‛ரத்னம், இந்தியன் 2' ஆகிய படங்கள் தோல்வி அடைந்ததுடன் அவரின் நடிப்பு பற்றியும் நிறைய கேலி, கிண்டல் வலைதளங்களில் வந்தன.
இதுபற்றி அவர் கூறுகையில் ‛‛சிரித்துக் கொண்டே ஒருவரை திட்டுவது எப்படி என எனக்கு புரியவில்லை. ஒருவரை அதிர்ஷ்டமில்லாதவர் என கூறுவது சரியானது அல்ல. அது அவரையும், அவரை பெற்றவர்களையும் பாதிக்கும். படங்கள் சரியாக போகவில்லை என ஹீரோவை பார்த்து யாராவது அதிர்ஷ்டமில்லாதவர் என கூறியது உண்டா. இதுவும் ஒருவகையான ஆணாதிக்கம் தான். பெரிய படங்கள் எனக்கு அதிர்ஷ்டத்தால் வரவில்லை, திறமையால் வந்தது'' என்றார் பிரியா பவானி சங்கர்.