என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

தமிழ் திரை உலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகத் தன்மையுடன் வலம் வருபவர் சசிகுமார்.  சசிக்குமார், சூரி நடிப்பில் வெளியான கருடன் திரைப்படம் 50 கோடிக்கும் மேல் வசூலித்து  நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து சசிக்குமார்  நடித்துள்ள ப்ரீடம் ஆகஸ்ட் 14 திரைப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் வலைதளத்தில் விவசாயப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் சசிகுமார். அதன் உடன், ‛‛எங்க வயலில் நடவு. வயலும் வாழ்வும்'' என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகின. மதுரையை சேர்ந்த சசிகுமார் தனது சொந்த ஊரில் விவசாய நிலங்கள் வைத்துள்ளார். அதில் விவசாயமும் செய்து வருகிறார்.
 
           
             
           
             
           
             
           
            