'ஹிருதயபூர்வம்' முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த மாளவிகா மோகனன் | பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை-2 கைவிடப்பட்டதா? | திருப்பதி கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த பிரபுதேவா! | நடிகை ரகுல் ப்ரீத் சிங் கணவரின் வீட்டில் குடியேறும் ஷாருக்கான்! | 'குட் பேட் அக்லி' படத்தின் மையக்கரு இதுதான்! - ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | சித்தார்த் - கியாரா திருமணத்தால் பல நாட்கள் அழுதேன் ; கிச்சா சுதீப் மகள் புது தகவல் | சல்மான்கான் குடும்பத்தினருடன் 'சிக்கந்தர்' படம் பார்த்த ஏ.ஆர் முருகதாஸ் | 'மிராஜ்' படப்பிடிப்பை நிறைவு செய்தார் ஜீத்து ஜோசப் | மோகன்லால் அறிமுக காட்சியே ரஜினியை மனதில் வைத்து உருவாக்கியதுதான் ; பிரித்விராஜ் | 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வரும் மனிஷா ஜஷ்னானி |
தமிழ் திரை உலகில் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகத் தன்மையுடன் வலம் வருபவர் சசிகுமார். சசிக்குமார், சூரி நடிப்பில் வெளியான கருடன் திரைப்படம் 50 கோடிக்கும் மேல் வசூலித்து நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து சசிக்குமார் நடித்துள்ள ப்ரீடம் ஆகஸ்ட் 14 திரைப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் வலைதளத்தில் விவசாயப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் சசிகுமார். அதன் உடன், ‛‛எங்க வயலில் நடவு. வயலும் வாழ்வும்'' என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாகின. மதுரையை சேர்ந்த சசிகுமார் தனது சொந்த ஊரில் விவசாய நிலங்கள் வைத்துள்ளார். அதில் விவசாயமும் செய்து வருகிறார்.