தம்பதிகளின் உறவுச் சிக்கலை பேசும் ‛மதர்' | சிங்கப்பூரில் மறு தணிக்கை செய்யப்பட்ட 'கூலி' | பிளாஷ்பேக் : நண்பருக்காக சம்பளம் வாங்காமல் நடித்த மோகன் | பிளாஷ்பேக் : அக்கா குடும்பத்திற்காக சினிமாவை துறந்த தங்கை | ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் |
கங்குவா படத்தை முடித்துவிட்ட சூர்யா அடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனது 44வது படத்தில் நடித்து வருகிறார். 2டி மற்றும் ஸ்டோன் பென்ச் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இதில் பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், கருணாகரன், சுஜித் ஷங்கர் உள்ளிட்டோர் இணைந்து நடிக்கின்றனர்.
ஏற்கனவே இதன் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற்று முடிந்தது. தற்போது சிறிய இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் சண்டை காட்சியின் போது சூர்யாவுக்கு தலையில் சிறிதாக காயம் ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார் சூர்யா. மருத்துவர் அவரை சில நாட்கள் ஓய்வெடுக்கும்படி அறிவுரைத்துள்ளனர்.