'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
சூரரைப்போற்று படத்திற்கு பிறகு மீண்டும் சுதா கொங்கரா , சூர்யா கூட்டணியில்' புறநானூறு' என்கிற படம் உருவாகுவதாக கடந்த ஆண்டில் அறிவித்தனர். பின்னர் ஒரு சில மாதங்களில் புறநானூறு திரைப்படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
புறநானூறு திரைப்படத்தில் சூர்யாவிற்கு பதிலாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இப்படம் சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாகிறது. இதனை சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இவருடன் இணைந்து மற்றொரு பிரபல கார்ப்பரேட் நிறுவனம் தயாரிப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இப்படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜை சந்தித்து சுதா கொங்கரா சமீபத்தில் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். கூலி படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற பிறகு லோகேஷ் இந்த படத்தில் நடிப்பார் என நெருங்கிய வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.