'ஹிருதயபூர்வம்' முதல் கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த மாளவிகா மோகனன் | பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை-2 கைவிடப்பட்டதா? | திருப்பதி கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த பிரபுதேவா! | நடிகை ரகுல் ப்ரீத் சிங் கணவரின் வீட்டில் குடியேறும் ஷாருக்கான்! | 'குட் பேட் அக்லி' படத்தின் மையக்கரு இதுதான்! - ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | சித்தார்த் - கியாரா திருமணத்தால் பல நாட்கள் அழுதேன் ; கிச்சா சுதீப் மகள் புது தகவல் | சல்மான்கான் குடும்பத்தினருடன் 'சிக்கந்தர்' படம் பார்த்த ஏ.ஆர் முருகதாஸ் | 'மிராஜ்' படப்பிடிப்பை நிறைவு செய்தார் ஜீத்து ஜோசப் | மோகன்லால் அறிமுக காட்சியே ரஜினியை மனதில் வைத்து உருவாக்கியதுதான் ; பிரித்விராஜ் | 8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வரும் மனிஷா ஜஷ்னானி |
சூரரைப்போற்று படத்திற்கு பிறகு மீண்டும் சுதா கொங்கரா , சூர்யா கூட்டணியில்' புறநானூறு' என்கிற படம் உருவாகுவதாக கடந்த ஆண்டில் அறிவித்தனர். பின்னர் ஒரு சில மாதங்களில் புறநானூறு திரைப்படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
புறநானூறு திரைப்படத்தில் சூர்யாவிற்கு பதிலாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இப்படம் சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாகிறது. இதனை சிவகார்த்திகேயனின் எஸ்.கே புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இவருடன் இணைந்து மற்றொரு பிரபல கார்ப்பரேட் நிறுவனம் தயாரிப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இப்படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜை சந்தித்து சுதா கொங்கரா சமீபத்தில் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். கூலி படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்ற பிறகு லோகேஷ் இந்த படத்தில் நடிப்பார் என நெருங்கிய வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.