வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! | ‛ஜெயிலர் 2' சஸ்பென்ஸை உடைத்த சிவராஜ் குமார் | சாதனை விலைக்கு விற்கப்பட்டதா 'டாக்சிக்' வெளிநாட்டு உரிமை ? | மீனவர் பிரச்னையை தனித்துவமாக பேசும் 'வலை': இரட்டை வேடங்களில் நடிக்கிறார் அதர்வா | வையாபுரிக்கு ஜோடியான ‛பிக்பாஸ்' தாமரை | இளையராஜா இசையமைக்கும் ‛சைலப்பன் சைக்களிள் மார்ட்' |

பாலாஜி கேசவன் இயக்கத்தில், நிவாஸ் கே பிரசன்னா இசையமைப்பில், அசோக் செல்வன், அவந்திகா மிஷ்ரா, ஊர்வசி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எமக்கு தொழில் ரொமான்ஸ்'.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று(ஜூலை 27) சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், பெப்ஸி தலைவர் ஆர்கே செல்வமணி உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் படத்தின் கதாநாயகன் அசோக் செல்வன், கதாநாயகி அவந்திகா மிஷ்ரா ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.
நிகழ்ச்சியில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் திருமலை, “படத்தை முடிப்பதற்கு தொடர்ந்து மூன்று ஆண்டுகள் போராடி போராடி ஒரு நடிகரையும், நடிகையையும் தேடி அலைவது இருக்கிறதே கொடுமையின் உச்சம். படத்தின் நடிகர் அசோக் செல்வனும் ஒரு படம் தயாரித்திருக்கிறார். அவருக்கு எவ்வளவு பணம் தர வேண்டுமா அந்த பணத்தைக் கொடுத்துவிட்டு தேதி கேட்டேன். அன்று அவருக்கு 31 லட்சம் கொடுத்தேன். இன்று அவருடைய சம்பளம் 2 கோடி, 3 கோடி. வாங்கட்டும், சந்தோஷம். அந்த 31 லட்சத்துக்கு வட்டி போட்டால் கூட ஒரு கோடி வரும். தயாரிப்பாளரைத் திரும்பிப் பார்க்காத எந்த நடிகரும் உச்சிக்குப் போக மாட்டார்கள்.
உங்களுக்குப் பிடிச்சிதானே இந்தப் படத்துல நடிக்க வந்தீங்க. ஒரு இரண்டு மணி நேரம்… ஒன்றரை மாசமா கேட்டுக்கிட்டு இருக்கோம், சொல்றன் சொல்றன்னு சொல்லிட்டு இருந்தாரு. இந்தப் படத்துக்கு வந்து அவரு புரமோட் பண்ணணும். ஒரு படம் ஓடுச்சின்னா அதிகம் சம்பாதிக்கப் போறது நடிகர்தான். ஒரு இயக்குனருக்குப் பக்கபலமே, அதில் நடிக்கும் நடிகர்கள்தான்” என்று காட்டமாகப் பேசினார்.




