சினிமா துறை நாறிப் போய் உள்ளது : சனம் ஷெட்டி கோபம் | பேட் மேன் பட நடிகர் வால் கில்மர் காலமானார் | குட் பேட் அக்லி படத்தின் ரன்னிங் டைம் வெளியானது | 29 வயதா.... நம்பமுடியவில்லை என்கிறார் ராஷ்மிகா | ஹிப் ஹாப் ஆதியின் படத்தை இயக்கும் ஜோ இயக்குனர் | காதல் பிரேக்கப்பிற்கு சானியா ஐயப்பன் சொன்ன அதிர்ச்சி காரணம் | முன்கூட்டியே ரிலீசாகும் மோகன்லாலின் தொடரும் படம் | எம்புரான் டைட்டில் : நன்றி கார்டில் சுரேஷ்கோபி பெயர் நீக்கம் | வீர தீர சூரன் வெற்றி : வின்டேஜ் புகைப்படம் பகிர்ந்த துருவ் விக்ரம் | பெண் விரிவுரையாளருக்கு 2.68 லட்சம் நஷ்ட ஈடு வழங்க மோகன்லால் பட தயாரிப்பாளருக்கு நீதிமன்றம் உத்தரவு |
வேலுார் : ''நான் படிக்கவில்லையே என்ற குற்ற உணர்வு இன்னும் எனக்கு இருக்கிறது,'' என, நடிகர் பாக்யராஜ் பேசினார்.
வேலுார் மாவட்டம், அரியூரில், நாராயணி கல்லுாரிகளின் குழுமத்தில் பயின்ற நர்சிங் மாணவ, மாணவிகள் மற்றும் ஆய்வக பணியாளர்கள் உள்ளிட்ட பல துறைகளில் படிப்பை முடித்தவர்களுக்கு, பட்டங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. நாராயணி மருத்துவமனை இயக்குனர் பாலாஜி தலைமை வகித்தார்.
திரைப்பட இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது: மாணவர்களாகிய நீங்கள் நல்ல படியாக படிப்பை முடித்துள்ளீர்கள். ஆனால், நான் படிக்கவில்லையே என்ற குற்ற உணர்வு இன்னும் என்னிடம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இருந்தாலும், சினிமாவில் ஏதோ ஒன்றை செய்தோம் என்ற ஆத்ம திருப்தியை அடைந்துள்ளேன். செவிலியர், டாக்டர் பணி என்பது மிகவும் பொறுமை தன்மையும், சேவை மனப்பான்மையுடனும், மக்களுக்கு சேவை செய்யும் பணி. இதை சிறப்பாக செய்து வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு பேசினார்.