'விக்ரம்' டிரைலர் சாதனையை முறியடித்த 'தக் லைப்' டிரைலர் | நயன்தாரா நடிப்பது பற்றிய வீடியோ, 'இவ்ளோ சுமாரா' எடுத்திருக்க வேண்டுமா? | ஆட்டுக்கார அலமேலு, முத்து, தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் - ஞாயிறு திரைப்படங்கள் | தக் லைப் டிரைலர் வெளியீடு : நீயா... நானா... என மோதும் கமல், சிம்பு! | தெலுங்கு தயாரிப்பு, இயக்குனர் படத்தில் ரஜினிகாந்த்? | பால்கே பயோபிக் ; ராஜமவுலி குழுவினர் சந்திக்கவேயில்லை - பால்கே பேரன் | குபேரா - தமிழக உரிமை வியாபாரம் எவ்வளவு தெரியுமா ? | இளையராஜா 'ரெபரன்ஸ்' : இரண்டு 200 கோடிகளை அள்ளிய மலையாளப் படங்கள் | குடும்பத்தை பிரித்தேனா... பொய்யான குற்றச்சாட்டு : மகளுடன் சேர்ந்து வாழ ரவி மோகனுக்கு மாமியார் கோரிக்கை | மே 24ல் ஜப்பானில் ரிலீஸ் ஆகும் டூரிஸ்ட் பேமிலி |
வேலுார் : ''நான் படிக்கவில்லையே என்ற குற்ற உணர்வு இன்னும் எனக்கு இருக்கிறது,'' என, நடிகர் பாக்யராஜ் பேசினார்.
வேலுார் மாவட்டம், அரியூரில், நாராயணி கல்லுாரிகளின் குழுமத்தில் பயின்ற நர்சிங் மாணவ, மாணவிகள் மற்றும் ஆய்வக பணியாளர்கள் உள்ளிட்ட பல துறைகளில் படிப்பை முடித்தவர்களுக்கு, பட்டங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. நாராயணி மருத்துவமனை இயக்குனர் பாலாஜி தலைமை வகித்தார்.
திரைப்பட இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது: மாணவர்களாகிய நீங்கள் நல்ல படியாக படிப்பை முடித்துள்ளீர்கள். ஆனால், நான் படிக்கவில்லையே என்ற குற்ற உணர்வு இன்னும் என்னிடம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இருந்தாலும், சினிமாவில் ஏதோ ஒன்றை செய்தோம் என்ற ஆத்ம திருப்தியை அடைந்துள்ளேன். செவிலியர், டாக்டர் பணி என்பது மிகவும் பொறுமை தன்மையும், சேவை மனப்பான்மையுடனும், மக்களுக்கு சேவை செய்யும் பணி. இதை சிறப்பாக செய்து வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு பேசினார்.