எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் | உங்களை ஏமாற்ற மாட்டேன் லாலேட்டா : மோகன்லால் மகளை அறிமுகப்படுத்தும் இயக்குனர் உறுதி | சினிமாவில் ஒரு வட்டத்துக்குள் சிக்க விரும்பவில்லை: கிரேஸ் ஆண்டனி | சுரேஷ் கோபி பட சென்சார் விவகாரம் : சனிக்கிழமை படம் பார்க்கும் நீதிபதி | கவுதம் ராம் கார்த்திக் படத்தில் இணையும் பிரபலங்கள் | மீண்டும் ஒரு லெஸ்பியன் படம் | வரி உயர்வு : ஆகஸ்ட் முதல் படங்களை வெளியிடப் போவதில்லை : புதுச்சேரி விநியோகஸ்தர்கள் அறிவிப்பு | இங்கே ஹோம்லி, அங்கே கவர்ச்சி : ராஷ்மிகாவின் அடடே பாலிசி | பிளாஷ்பேக்: வசுந்தரா தாசை நிராகரித்த மணிரத்னம் |
வேலுார் : ''நான் படிக்கவில்லையே என்ற குற்ற உணர்வு இன்னும் எனக்கு இருக்கிறது,'' என, நடிகர் பாக்யராஜ் பேசினார்.
வேலுார் மாவட்டம், அரியூரில், நாராயணி கல்லுாரிகளின் குழுமத்தில் பயின்ற நர்சிங் மாணவ, மாணவிகள் மற்றும் ஆய்வக பணியாளர்கள் உள்ளிட்ட பல துறைகளில் படிப்பை முடித்தவர்களுக்கு, பட்டங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. நாராயணி மருத்துவமனை இயக்குனர் பாலாஜி தலைமை வகித்தார்.
திரைப்பட இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது: மாணவர்களாகிய நீங்கள் நல்ல படியாக படிப்பை முடித்துள்ளீர்கள். ஆனால், நான் படிக்கவில்லையே என்ற குற்ற உணர்வு இன்னும் என்னிடம் இருந்து கொண்டு தான் இருக்கிறது. இருந்தாலும், சினிமாவில் ஏதோ ஒன்றை செய்தோம் என்ற ஆத்ம திருப்தியை அடைந்துள்ளேன். செவிலியர், டாக்டர் பணி என்பது மிகவும் பொறுமை தன்மையும், சேவை மனப்பான்மையுடனும், மக்களுக்கு சேவை செய்யும் பணி. இதை சிறப்பாக செய்து வெற்றி பெற வேண்டும்.
இவ்வாறு பேசினார்.