வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

மலையாள திரை உலகில் பிரபல கதாசிரியரும் இயக்குனருமான எம்டி வாசுதேவன் நாயர் எழுதிய ஒன்பது கதைகள் தற்போது மனோரதங்கள் என்கிற பெயரில் ஆந்தாலஜி படமாக உருவாகியுள்ளது. இந்த ஒன்பது கதைகளை எட்டு மலையாள முன்னணி இயக்குனர்கள் இயக்கியுள்ளனர். இதில் இயக்குனர் பிரியதர்ஷன் மட்டும் ஒளவும் தீரவும் மற்றும் சில லிகிதங்கள் என இரண்டு கதைகளை இயக்கியுள்ளார். இதில் ஒளவும் தீரவும் கதையில் மோகன்லால் மைய கதாபாத்திரமாக நடித்துள்ளார். அது மட்டுமல்ல இந்த ஆந்தாலாஜி படத்தில் மம்முட்டி, கமல், பஹத் பாசில், உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.
எம்டி வாசுதேவன் நாயரின் கதைகளை இயக்குவது தனது நீண்ட நாள் கனவு என்றும், அது தற்போது நனவாகியுள்ளது என்றும் கூறியுள்ளார் பிரியதர்ஷன். என்னை பற்றி எப்போதும் எம்டி வாசுதேவன் நாயரிடம் மோகன்லால் பேசிக் கொண்டிருப்பார், அவர் மூலமாகவே எம்டி வாசுதேவ நாயரின் இரண்டு கதைகளை படமாக்கும் வாய்ப்பு கிடைத்தது பாக்கியம். அதிலும் வாசுதேவன் நாயர் கதை என்றால் எப்போது கூப்பிட்டாலும் நான் தயார், எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தேதிகளை அட்ஜஸ்ட் செய்து ஒதுக்கித் தருகிறேன் என்று மோகன்லால் கூறியிருந்தார்.
இந்த ஆந்தாலஜி படத்தின் இரண்டு கதைகள் என்னிடம் வந்தபோது அதில் ஓலவும் தீரவும் படத்திற்கு மோகன்லால் சரியாக இருப்பார் என நினைத்து அவரை அழைத்ததுமே சொன்னது போலவே வந்து நடித்துக் கொடுத்தார்” என்று கூறியுள்ளார் பிரியதர்ஷன். மலையாளத்தில் மோகன்லாலை வைத்து கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட படங்களை இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.




