தங்கலான் படத்திற்காக அதிகம் மெனக்கெட்டேன்: மனம் திறந்த மாளவிகா மோகனன் | திருமணம், குழந்தை பெற்றுக் கொள்வதுதான் முழுமையான வாழ்க்கையா : சமந்தா கேள்வி | ஸ்வீட் ஹார்ட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மணிரத்னத்துடன் எடுத்த போட்டோ : ராஜ்குமார் பெரியசாமி நெகிழ்ச்சி | வெளியானது 'விடாமுயற்சி' படம்: ரசிகர்களுடன் படம் பார்த்த திரை பிரபலங்கள் | பிளாஷ்பேக் : படப்பிடிப்பிற்கே வந்து நடிகையை கடத்த முயன்றவர்களை அடித்து துரத்திய கொச்சின் ஹனீபா | தான் நடத்திய வழக்கை படமாக இயக்கும் வழக்கறிஞர் | கேரளாவில் இருந்து நடந்தே வந்து விஜய்யை சந்தித்த ரசிகர் | ராஷ்மிகாவுக்கு உதவி செய்யாத விஜய் தேவரகொண்டா ; நெட்டிசன்கள் கண்டனம் | திலீப் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மோகன்லால் |
பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகிறார். நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டு சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கிய அவர் பின்னர் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்து கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இரண்டாவது இன்னிங்ஸில் பிஸியான நடிகையாக நடித்து வருகிறார்.
அதேசமயம் இவர்களது மகள் மீனாட்சி பெற்றோரின் விவாகரத்திற்கு பிறகு தனது தந்தை திலீப் மற்றும் சிற்றன்னை நடிகை காவ்யா மாதவன் இருவருடன் தான் இணைந்து வசித்து வருகிறார். அதேசமயம் இத்தனை வருடங்களில் அவர் தனது தாய் மஞ்சு வாரியரை சந்தித்த ஒரு புகைப்படமோ அல்லது அவரைப் பற்றி பேசிய ஏதாவது ஒரு வீடியோவோ ஒன்று கூட சோசியல் மீடியாவில் வெளியானது இல்லை. அதனால் இருவரும் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருக்கிறார்களா என்கிற சந்தேகம் இப்போது வரை பலருக்கும் இருந்து வருகிறது.
இந்த நிலையில் மீனாட்சி தனது தாய் மஞ்சு வாரியரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்வதாக ஒரு செய்தி சோசியல் மீடியாவில் வெளியானது. ஆனால் நிஜத்தில் மஞ்சு வாரியர் தான் தனது மகள் மீனாட்சியை இன்ஸ்டாகிராமில் நீண்ட நாளைக்கு முன்பிருந்தே பின் தொடர்கிறார் என்றும், ஆனால் மீனாட்சி தனது தாயை பின் தொடரவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டாக்டர் படிப்பை முடித்து பட்டம் பெற்ற மீனாட்சி அந்த மகிழ்ச்சியை தனது தந்தை திலீப் மற்றும் சிற்றன்னை ஆகியோருடன் சேர்ந்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டார். திரையுலகில் இருந்து பலரும் மீனாட்சிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த நிலையில் மஞ்சு வாரியர் இதுவரை தனது மகளுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.