‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியர் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகிறார். நடிகர் திலீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டு சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கிய அவர் பின்னர் அவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்து கடந்த 10 வருடங்களுக்கு மேலாக இரண்டாவது இன்னிங்ஸில் பிஸியான நடிகையாக நடித்து வருகிறார்.
அதேசமயம் இவர்களது மகள் மீனாட்சி பெற்றோரின் விவாகரத்திற்கு பிறகு தனது தந்தை திலீப் மற்றும் சிற்றன்னை நடிகை காவ்யா மாதவன் இருவருடன் தான் இணைந்து வசித்து வருகிறார். அதேசமயம் இத்தனை வருடங்களில் அவர் தனது தாய் மஞ்சு வாரியரை சந்தித்த ஒரு புகைப்படமோ அல்லது அவரைப் பற்றி பேசிய ஏதாவது ஒரு வீடியோவோ ஒன்று கூட சோசியல் மீடியாவில் வெளியானது இல்லை. அதனால் இருவரும் ஒருவருக்கொருவர் தொடர்பில் இருக்கிறார்களா என்கிற சந்தேகம் இப்போது வரை பலருக்கும் இருந்து வருகிறது.
இந்த நிலையில் மீனாட்சி தனது தாய் மஞ்சு வாரியரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின் தொடர்வதாக ஒரு செய்தி சோசியல் மீடியாவில் வெளியானது. ஆனால் நிஜத்தில் மஞ்சு வாரியர் தான் தனது மகள் மீனாட்சியை இன்ஸ்டாகிராமில் நீண்ட நாளைக்கு முன்பிருந்தே பின் தொடர்கிறார் என்றும், ஆனால் மீனாட்சி தனது தாயை பின் தொடரவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு டாக்டர் படிப்பை முடித்து பட்டம் பெற்ற மீனாட்சி அந்த மகிழ்ச்சியை தனது தந்தை திலீப் மற்றும் சிற்றன்னை ஆகியோருடன் சேர்ந்து சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டார். திரையுலகில் இருந்து பலரும் மீனாட்சிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த நிலையில் மஞ்சு வாரியர் இதுவரை தனது மகளுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.