எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பேசிய விக்ரம் | விஜய் உடன் நடந்த சந்திப்பு : அஸ்வத் மாரிமுத்து நெகிழ்ச்சி பதிவு | பிளாஷ்பேக் : கமல்ஹாசனுடன் பெண் வேடத்தில் நடித்த சிவகுமார் | பிளஷ்பேக் : அன்று சிந்திய பாசம் | ஆக்ஷன் ஹீரோவான பிரஜின் | தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆசை : சீமா பிஸ்வாஸ் | ஹிந்தியில் ரீமேக் ஆகும் 'பெருசு' | ஓடிடியால் கூலி வெளியாவதில் சிக்கலா? | பிளாஷ்பேக்: வயது வந்தோருக்கான சான்றிதழ் பெற்று வெளிவந்த முதல் தமிழ்ப்படம் எம் ஜி ஆரின் “மர்மயோகி” | வீர தீர சூரன், எல் 2 : எம்புரான் தியேட்டரில் போட்ட போட்டி |
முன்னணி கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி. அவனே ஸ்ரீமன் நாராயணா, 777 சார்லி, சப்த சாக்ரதாச்சே எல்லோ படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர். அவர் தயாரித்து நடித்த 'பேச்சிலர் பார்ட்டி' என்ற படம் கடந்த ஜனவரி மாதம் தியேட்டர்களில் வெளியானது. இந்த படத்தில் அனுமதி இல்லாமல் இரண்டு கன்னட பாடல்களை பயன்படுத்தியதாக காப்புரிமை சட்டத்தின் கீழ் ரக் ஷித் ஷெட்டி மற்றும் அவரது பட தயாரிப்பு நிறுவனம் மீது மியூசிக் நிறுவனம் ஒன்று போலீசில் புகார் அளித்தது.
“காலி மாது' படத்தில் இடம் பெற்ற 'நியாய எல்லிடே மற்றும் ஓம்மே நின்னான்னு' ஆகிய பாடல்களை எங்களிடம் அனுமதி பெறாமல் பேச்சிலர் பார்ட்டி படத்தில் ரக் ஷித் ஷெட்டி பயன்படுத்தி உள்ளார். இதனால் எங்களுக்கு மன உளைச்சலும், பொருளாதார இழப்பும் ஏற்பட்டுள்ளது. அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த புகாரின் பேரில் ரக் ஷித் ஷெட்டி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனால் அவர் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து பெங்களூரு உயர்நீதி மன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு ரக் ஷித் ஷெட்டி மனு தாக்கல் செய்துள்ளார்.