சிவகார்த்திகேயன் புதிய படத்தின் இயக்குனர் இவரா? | 29 படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | நானியா... சூர்யாவா... : மனம் திறந்த அபிஷன் ஜீவிந்த் | பிரபுதேவா, வடிவேலு கூட்டணியில் பேங் பேங் | தெலுங்கில் ரீ ரிலீஸாகும் ‛காஞ்சனா' | ஜனநாயகன் விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் தணிக்கை வாரியம் கேவியட் மனு தாக்கல் | திரைப்பட விழா முடிந்த 2 நாள் கழித்து தான் அழைப்பிதழ் வருகிறது : நடிகர் திலகன் மகன் காட்டம் | 28 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மோகன்லால். மம்முட்டியுடன் நடிக்கிறேன் : பிரம்மிக்கும் குஞ்சாகோ போபன் | சொந்த ஊரில் இளையராஜாவிடம் பெற்ற விருது : பாக்யஸ்ரீ போர்ஸ் பெருமை | நடிகராக அறிமுகமாகும் அபிஷன் ஜீவிந்த்துக்கு சிம்ரன் வாழ்த்து |

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், விஜய், பிரசாந்த், பிரபுதேவா, மோகன், மீனாட்சி சவுத்ரி, சினேகா, லைலா மற்றும் பலர் நடிக்கும் படம் 'தி கோட்'. படத்திற்கான இறுதிக்கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 5ம் தேதி இப்படம் வெளியாகிறது.
இப்படத்திற்கான அனைத்து வியாபாரங்களும் முடிவடைந்துவிட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் படத்தைத் தயாரித்துள்ள நிறுவனமான ஏஜிஎஸ் சுமார் 100 கோடிக்கும் அதிகமாக 'டேபிள் பிராபிட்' பார்த்துவிட்டதென சொல்கிறார்கள்.
விஜய் நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'லியோ' படத்துடன் ஒப்பிடும் போது சில கோடிகள் குறைவாகத்தான் வியாபாரம் நடந்துள்ளதாம். ஆனால், எந்த இடைஞ்சலும் இல்லாமல் படப்பிடிப்பை முடித்து இந்திய அளவில் தியேட்டர் உரிமை விற்பனை, வெளிநாட்டு உரிமை விற்பனை, சாட்டிலைட், ஓடிடி உரிமை விற்பனை என அனைத்தையும் எந்த சிக்கல் இல்லாமல் முடித்துவிட்டார்களாம்.
படம் வெளிவந்து ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுவிட்டால் படத்திற்கான லாப வருமானம் அதிகமாக இருக்கும் என்று படத்தை வாங்கியவர்களும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்களாம்.