நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி சிறிய வேடங்களில் நடித்து வந்தார். அவர் நடித்து பாப்புலர் ஆனதை விட தெலுங்கு இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி பாப்புலர் ஆனதுதான் அதிகம். தமிழில் நடிகர் ராகவா லாரன்ஸ், விஷால், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறினார்.
சமீபகாலமாக அவர் அமைதியாக இருந்து வருகிறார். என்றாலும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு, துணை முதல்வர் பவன் கல்யாண், உள்துறை அமைச்சர் அனிதா பற்றி முன்பு அவர் வெளியிட்ட கருத்துகள் இப்போது அவருக்கு எதிராக வந்து நிற்கிறது.
கர்னூலை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி தலைவர் நாகராஜூ அவதூறு வீடியோ வெளியிட்ட ஸ்ரீரெட்டி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என 3வது நகர போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நடிகை ஸ்ரீரெட்டி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படாலாம் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.