சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

‛பக்த துருவ மார்க்கண்டேயா' என்ற தெலுங்குப் படத்தின் மூலம் முதன்முதலாக குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அஸ்வினி. பின்னர் 'பலே தம்முடு' என்ற படத்தின் மூலம் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடித்து ஹீரோயின் ஆனார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் தமிழில் கற்பூர தீபம், மாட்டுக்கார மன்னாரு, கண்மணியே பேசு, எடுத்த சபதம் முடிப்பேன், தர்மா, கும்பகோணம் கோபாலு, மானசீக காதல், உனக்காக எல்லாம் உனக்காக, என்னம்மா கண்ணு, பெண்கள், பிரியாத வரம் வேண்டும், மிட்டா மிராசு, ஆட்ட நாயகன் போன்றவற்றில் இவர் நடித்துள்ளார். பார்திபனுடன் பொண்டாட்டி தேவை படத்தில் நடித்தார்.
தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் திடீரென்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சம்பாதித்த பணம் அனைத்தும் கரைந்து போகவே வறுமையில் தள்ளப்பட்டார். 2012ம் ஆண்டு மரணம் அடைந்தார். அப்போது அவருக்கு 38 வயது. இறந்த அஸ்வினியின் உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லக்கூட பணமின்றி தவித்துள்ளனர். பார்த்திபன் அதற்கு உதவி செய்துள்ளார். அவ்வப்போது அஸ்வினி குடும்பத்திற்கும் உதவி உள்ளார். அஸ்வினியின் மகன் படிப்பு செலவும் பார்த்திபன் ஏற்றுக் கொண்டிருப்பதாக சொல்வார்கள்.