ரஜினியின் ஜெயிலர் 2 வில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | மகாராஜா படத்தால் அனுராக்கிற்கு ஆஸ்கர் இயக்குனரிடம் வந்த அழைப்பு | ஏழு மலை ஏழு கடல் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரீ ரிலீஸ் ஆகும் ரஜினி முருகன் | ஓடிடியில் வெளியாகும் நயன்தாராவின் டெஸ்ட் | கீர்த்தி சுரேஷ் - ஆண்டனி உடன் இணைந்து பொங்கல் கொண்டாடிய விஜய் | கேம் சேஞ்சர் படத்தின் ரிசல்ட் ஏமாற்றம் அளிக்கிறது : இயக்குனர் ஷங்கர் | அனுஷ்காவின் காதி படத்தில் முக்கிய வேடத்தில் விக்ரம் பிரபு | பெரிய படங்ளை வாங்கிய ஓடிடி நிறுவனம் | நட்புக்காக கெஸ்ட் ரோலில் நடித்ததுடன் சக்சஸ் மீட்டிலும் கலந்து கொண்ட மம்மூட்டி |
90ஸ் ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாக வளம்வந்தவர் நடிகை ரம்பா. டாப் இடத்தில் இருக்கும்போது சினிமாவை விட்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்து விட்டார். அதற்கு பிறகு சின்னத்திரையில் பல ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக கலந்து கொண்ட இவர் தினமலர் நாளிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி:
நடிகர் விஜய்யை பார்க்க வேண்டும் என என் குழந்தைகள் கேட்டு வந்தனர். அதனை விஜயிடம் தெரிவித்தேன். அதன்படி, சமீபத்தில் அவரை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டோம். என் குழந்தைகள் அவரின் ரசிகர்கள். அதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ‛நினைத்தேன் வந்தாய்' படத்தில் நான் நடித்தபோது பார்த்த அதே போலவே இப்போதும் விஜய் அதே போன்று இருக்கிறார். ஆனால் அந்த படத்தில் நடித்தபோது அமைதியாக இருப்பார், இப்போது என் குழந்தைகளுடன் நன்றாக பேசி பழகினார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக அறிவித்தபோது நான் கனடாவில் இருந்தேன். அவர் அரசியலுக்கு வருவது துணிச்சலான முடிவு. நான் சினிமாவில் நடித்து 25 ஆண்டுகள் ஆனாலும், நீண்ட இடைவெளி விட்டுவிட்டேன். பெரும்பாலான பிடித்த ஹீரோக்களுடன் ஏற்கனவே நடித்துவிட்டேன். இந்தாலும், இனிமேல், நடிப்பதென்றால் பிடித்தமான ஹீரோ, பிடித்தமான ரோல் கிடைத்தால் நடிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.