ஏவிஎம் சரவணனுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி | பிளாஷ்பேக்: 2 முறை படமான நல்ல தங்காள் கதை | ஏவிஎம் சரவணன் படத்தயாரிப்பை நிறுத்தியது ஏன்? | கை கட்டியபடி பேசுவார், வெள்ளை உடைகளை விரும்பி அணிவார்: பணிவுக்கும் உபசரிப்புக்கும் புகழ் பெற்ற ஏவி.எம்.சரவணன் | பிரபலங்கள் பட்டியல் 2025: தமிழ் நடிகர்கள், நடிகைகளுக்கு இடமில்லை… | சாய் பல்லவியால் மறுவாழ்வு பெற்றேன் ; இசையமைப்பாளர் நெகிழ்ச்சி | திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார் | சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா |

‛திரௌபதி, பகாசூரன்' படங்களை இயக்கியவர் மோகன்ஜி. ஒரு குறிப்பிட்ட சாதி அடையாளத்துடன் படங்களைக் கொடுப்பதாக அவர் மீதும் விமர்சனங்கள் உண்டு. 'பகாசூரன்' படத்தில் இயக்குனர் செல்வராகவன் தான் கதாநாயகனாக நடித்திருந்தார்.
செல்வராகவன் இயக்கிய 'புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன்' ஆகிய படங்களின் இரண்டாம் பாகத்தை எடுக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் அவ்வப்போது கோரிக்கை வைப்பார்கள். அந்த இரண்டு படங்களும் வியாபார ரீதியாக வெற்றிப் படங்களாக அமையவில்லை என்றாலும் இன்று வரை பேசப்படும் படங்களாக இருக்கின்றன.
கடந்த 2021ல் தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை இயக்க போவதாக செல்வராகவன் அறிவித்தார். அறிவிப்போடு மட்டுமே உள்ள இந்தப்படம் அதன்பின் டேக்-ஆப் ஆகவில்லை.
இந்நிலையில் இயக்குனர் மோகன்ஜி, “கண்ட கண்ட கதையை எல்லாம் படமாக்கும் பெரிய தயாரிப்பு நிறுவனங்கள், ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து வெளியிடுங்கள். இன்னும் இந்த படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு புரியாமல் நீங்க எல்லாம் என்ன தயாரிப்பு நிறுவனமோ…” என சில பெரிய தயாரிப்பு நிறுவனங்களை சாடியுள்ளார்.
வேறொரு இயக்குனரின் படத்திற்கு இரண்டாம் பாகத்தை உருவாக்க அந்த இயக்குனருக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று மோகன்ஜி கேட்டுள்ளார். அதே சமயம் அவரிடமே ஒரு ரசிகர், “நீங்கள் எப்போது திரௌபதி 2' எடுக்க போறிங்க,” எனக் கேட்டுள்ளார்.
மோகன் ஜி குறிப்பிடுவதை பார்க்கையில் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை தயாரிக்க யாரும் முன்வரவில்லை என தெரிகிறது.