நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
ஹிந்தி திரையுலகில் ஒரு காலத்தில் காதல் மன்னன் என்று பெயர் பெற்றவர் இம்ரான் ஹாஷ்மி. இவரை 'சீரியல்கிஸ்ஸர்' என்றும் அழைத்தனர். காரணம் இம்ரான் ஹாஷ்மி எல்லா படங்களிலும் நாயகியை உதட்டோடு உதடு முத்தமிடும் காட்சிகளில் நடித்தார். தற்போது வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று நடிகர், நடிகைகள் குறித்து ஒரு வரியில் பதில் அளித்தார். ஐஸ்வர்யாராய் என்றதும் 'பிளாஸ்டிக்' என்றார். இது சர்ச்சையானது.
ஐஸ்வர்யா ராயை பிளாஸ்டிக் என்றுஅவதூறாக எப்படி சொல்லலாம் என்று அவரது ரசிகர்கள் இம்ரான் ஹாஷ்மியை கடுமையாக திட்டியும், கண்டித்தும் வலைதளத்தில் பதிவுகள் வெளியிட்டனர்.
இதையடுத்து ஐஸ்வர்யாராயிடம், இம்ரான் ஹாஷ்மி மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'ஐஸ்வர்யா ராய் மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ஏதோ ஜாலியாக அந்த வார்த்தையை சொல்லிவிட்டேனே தவிர, நானும் ஐஸ்வர்யா ராயின் தீவிர ரசிகன்தான். அவர் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. எனது பேச்சு யாரையேனும் புண்படுத்தி இருந்தால் மன்னித்துவிடுங்கள்' என்று குறிப்பிட்டு உள்ளார்.