'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. | குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்! | போதைப்பொருள் பயன்படுத்த தனி ரூம் வசதி ; பெண் தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு | வார்-2வில் விஜய்யின் ஸ்டைலை காப்பி அடித்த ஹிருத்திக் ரோஷன் | தள்ளிப்போகும் 'தொடரும்' பட ஓடிடி ரிலீஸ் | ஜெயிலரின் வில்லனாக நடிக்க இருந்தது மம்முட்டி தான் ; ரகசியம் உடைத்த வசந்த் ரவி |
கன்னட நடிகர் தர்ஷன், அவரது காதலி பவித்ர கவுடாவை சமூக வலைத்தளங்களில் தொந்தரவு செய்த ரசிகர் ரேணுகாசாமி என்பவரைக் கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.
தர்ஷன், அவரது காதலி பவித்ர கவுடா அந்த வழக்குடன் சேர்த்து கைது செய்யப்பட்டுள்ளவர்கள் விசாரணைக் கைதிகளாக சிறையில் உள்ளனர். பெங்களுரூவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் தர்ஷன்.
அங்கு அவருக்கு அளிக்கப்படும் உணவுகள் தனக்கு செரிமானப் பிரச்சனையை ஏற்படுத்துவதாகவும், அதனால் வீட்டு சாப்பாட்டை அனுமதிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார். மேலும் தினமும் அசைவ உணவு சாப்பிடும் பழக்கம் கொண்ட தர்ஷனுக்கு சிறையில் விதிகளின்படி வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே அசைவ உணவு வழங்கப்படுகிறது.
அவரது கோரிக்கையை உயர்நீதிமன்றம் விரைவில் விசாரிக்கும் எனத் தெரிகிறது.