'சக்திமான்' ஆக ரன்வீர் சிங்: பசில் ஜோசப் உறுதி | கோவை தமிழ் பிடிக்கும்: கிர்த்தி ஷெட்டி | அஜித் படத்தை இயக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை! சொல்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் | 'ஜனநாயகன்' கடைசி படமா? இல்லையா? இன்னும் முடிவெடுக்காத விஜய்! | ஜூலை 4ம் தேதி திரைக்கு வரும் சூர்யா சேதுபதியின் 'பீனிக்ஸ் வீழான்' | பிரகாசமான எதிர்காலம்: விஜய் வெளியிட்ட அறிக்கை! | அருண்குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகும் கமல்ஹாசன்! அன்பறிவ் இயக்கும் படம் தள்ளிப் போகிறது! | போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… |
கன்னட நடிகர் தர்ஷன், அவரது காதலி பவித்ர கவுடாவை சமூக வலைத்தளங்களில் தொந்தரவு செய்த ரசிகர் ரேணுகாசாமி என்பவரைக் கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.
தர்ஷன், அவரது காதலி பவித்ர கவுடா அந்த வழக்குடன் சேர்த்து கைது செய்யப்பட்டுள்ளவர்கள் விசாரணைக் கைதிகளாக சிறையில் உள்ளனர். பெங்களுரூவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் தர்ஷன்.
அங்கு அவருக்கு அளிக்கப்படும் உணவுகள் தனக்கு செரிமானப் பிரச்சனையை ஏற்படுத்துவதாகவும், அதனால் வீட்டு சாப்பாட்டை அனுமதிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார். மேலும் தினமும் அசைவ உணவு சாப்பிடும் பழக்கம் கொண்ட தர்ஷனுக்கு சிறையில் விதிகளின்படி வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே அசைவ உணவு வழங்கப்படுகிறது.
அவரது கோரிக்கையை உயர்நீதிமன்றம் விரைவில் விசாரிக்கும் எனத் தெரிகிறது.