புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
கன்னட நடிகர் தர்ஷன், அவரது காதலி பவித்ர கவுடாவை சமூக வலைத்தளங்களில் தொந்தரவு செய்த ரசிகர் ரேணுகாசாமி என்பவரைக் கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.
தர்ஷன், அவரது காதலி பவித்ர கவுடா அந்த வழக்குடன் சேர்த்து கைது செய்யப்பட்டுள்ளவர்கள் விசாரணைக் கைதிகளாக சிறையில் உள்ளனர். பெங்களுரூவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் தர்ஷன்.
அங்கு அவருக்கு அளிக்கப்படும் உணவுகள் தனக்கு செரிமானப் பிரச்சனையை ஏற்படுத்துவதாகவும், அதனால் வீட்டு சாப்பாட்டை அனுமதிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார். மேலும் தினமும் அசைவ உணவு சாப்பிடும் பழக்கம் கொண்ட தர்ஷனுக்கு சிறையில் விதிகளின்படி வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே அசைவ உணவு வழங்கப்படுகிறது.
அவரது கோரிக்கையை உயர்நீதிமன்றம் விரைவில் விசாரிக்கும் எனத் தெரிகிறது.