சிறையில் அடைக்க சொன்ன டாக்டர் : சமந்தா பதிலடி | மூன்று மணி நேரம் ஓடப் போகும் 'இந்தியன் 2' | சிவகார்த்திகேயன் - சிபி சக்ரவர்த்தி இணையும் படத்தின் டைட்டில் பாஸ்? | கர்ப்ப காலத்தில் யோகா செய்த தீபிகா படுகோனே | கவுண்டம்பாளையம் ரிலீஸ் தள்ளிவைப்பு : படத்தை திரையிட விடாமல் மிரட்டுவதாக ரஞ்சித் புகார் | சார்-ல் இணைந்து பாடிய ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி | டீன்ஸ் கிராபிக்ஸ் : கோவை போலீசில் புகார் அளித்த பார்த்திபன் | விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தில் பயன்படுத்த யாரும் அனுமதி பெறவில்லை : தேமுதிக., | விஜய், மோகன்லாலுடன் இணைந்து நடிக்கும் கோமல் சர்மா | வானத்தில் பறந்த இந்தியன் கொடி |
தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் அந்தப் படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் மலையாள நடிகை நித்யா மேனன். 'ஓ காதல் கண்மணி, மெர்சல், திருச்சிற்றம்பலம்” ஆகிய படங்களில் அவருடைய நடிப்பு ரசிகர்களின் மனதில் நிலையானதொரு இடத்தைப் பிடித்தவை.
தற்போது விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க, பாண்டிராஜ் இயக்க உள்ள படத்தில் நித்யாவைக் கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். கிராமம், திருவிழா, கூட்டுக்குடும்பம் என நகரும் ஒரு கதையில் நித்யா நடித்தால் பொருத்தமாக இருக்கும் என அவரிடம் பேசி வருகிறார்கள்.
இயல்பான நடிகர் எனப் பெயரெடுத்த விஜய் சேதுபதி, இயல்பான நடிகை எனப் பெயரெடுத்த நித்யா மேனன் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்தால் சிறப்பாக இருக்கும் என முயன்று வருகிறார்கள். நித்யா ஓகே சொல்லிவிட்டால் படத்தின் அறிவிப்பு விரைவில் வந்துவிடும்.
ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து மலையாளத்தில் 19(1)(a) என்ற படத்தில் நடித்துள்ளனர்.