நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் அந்தப் படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் மலையாள நடிகை நித்யா மேனன். 'ஓ காதல் கண்மணி, மெர்சல், திருச்சிற்றம்பலம்” ஆகிய படங்களில் அவருடைய நடிப்பு ரசிகர்களின் மனதில் நிலையானதொரு இடத்தைப் பிடித்தவை.
தற்போது விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க, பாண்டிராஜ் இயக்க உள்ள படத்தில் நித்யாவைக் கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். கிராமம், திருவிழா, கூட்டுக்குடும்பம் என நகரும் ஒரு கதையில் நித்யா நடித்தால் பொருத்தமாக இருக்கும் என அவரிடம் பேசி வருகிறார்கள்.
இயல்பான நடிகர் எனப் பெயரெடுத்த விஜய் சேதுபதி, இயல்பான நடிகை எனப் பெயரெடுத்த நித்யா மேனன் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்தால் சிறப்பாக இருக்கும் என முயன்று வருகிறார்கள். நித்யா ஓகே சொல்லிவிட்டால் படத்தின் அறிவிப்பு விரைவில் வந்துவிடும்.
ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து மலையாளத்தில் 19(1)(a) என்ற படத்தில் நடித்துள்ளனர்.