சிறையில் அடைக்க சொன்ன டாக்டர் : சமந்தா பதிலடி | மூன்று மணி நேரம் ஓடப் போகும் 'இந்தியன் 2' | சிவகார்த்திகேயன் - சிபி சக்ரவர்த்தி இணையும் படத்தின் டைட்டில் பாஸ்? | கர்ப்ப காலத்தில் யோகா செய்த தீபிகா படுகோனே | கவுண்டம்பாளையம் ரிலீஸ் தள்ளிவைப்பு : படத்தை திரையிட விடாமல் மிரட்டுவதாக ரஞ்சித் புகார் | சார்-ல் இணைந்து பாடிய ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி | டீன்ஸ் கிராபிக்ஸ் : கோவை போலீசில் புகார் அளித்த பார்த்திபன் | விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தில் பயன்படுத்த யாரும் அனுமதி பெறவில்லை : தேமுதிக., | விஜய், மோகன்லாலுடன் இணைந்து நடிக்கும் கோமல் சர்மா | வானத்தில் பறந்த இந்தியன் கொடி |
தெலுங்குத் திரையுலகத்தில் பெரிய நடிகர்களின் புதிய படங்கள் வெளிவரும் போது டிக்கெட் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள தெலங்கானா, ஆந்திர அரசுகள் அனுமதி அளிக்கும்.
கடந்த வாரம் வெளியான 'கல்கி 2898 ஏடி' படத்திற்குக் கூட இரண்டு அரசுகளும் இப்படி அனுமதி அளித்தன. இந்நிலையில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் இப்படியான டிக்கெட் கட்டண உயர்வுக்கு புதிதாக இரண்டு கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
டிக்கெட் கட்டண உயர்வு கேட்கும் படங்களின் ஹீரோக்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் இரண்டு வீடியோக்களில் நடித்துக் கொடுத்தால் மட்டுமே இனி கட்டண உயர்வு அனுமதிக்கப்படும் என்று கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
சைபர் கிரைம், போதைப் பொருளுக்கு எதிரான கருத்துக்களை அந்த வீடியோக்களில் சொல்ல வேண்டும். அவற்றை டிக்கெட் கட்டண உயர்வுக்கான விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். அது மட்டுமல்ல படங்களின் பிரிமீயர் காட்சிகளின் போது அந்த வீடியோக்களை தியேட்டர்களில் திரையிட வேண்டும் என்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது.