பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் | காத்திருந்த இயக்குனர்களுக்கு அதிர்ச்சியளித்த ‛அமரன்' | ‛ஏஸ்' எனக்கு ஸ்பெஷலான படம்: ருக்மணி வசந்த் | ‛‛100 வருஷம் ஆனாலும் பாசம் மாறாது'' : மதுரை மக்கள் பற்றி விஷால் கருத்து | ‛‛எனக்கு பிடித்த மதுரையும், மீனாட்சி அம்மனும்...'': ஐஸ்வர்யா லட்சுமி நெகிழ்ச்சி | அம்ரிதா பிரிதமின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க விரும்பும் நிம்ரத் கவுர் |
ஒரு நாள் கூத்து, டிக் டிக் டிக், சங்கத்தமிழன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் நிவேதா பெத்துராஜ். தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்துள்ள பார்டி படம் இன்னும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது. தற்போது அவர் கைவசம் எந்த படமும் இல்லை. சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது. இதுதவிர விளையாட்டு மற்றும் ரேஸில் ஆர்வம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் இவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது : ‛‛நான் எதிர்மறையாக என்ன நினைத்தாலும் அது நடந்துவிடும். ஒருமுறை என் பாய் பிரண்ட் என்னை ஏமாற்றிவிடுவது போன்று கற்பனை செய்திருந்தேன். அதுபோலவே நடந்து, அவர் இன்னொருவருடன் சென்றுவிட்டார். இப்போது வைத்துள்ள கார் முதல் எதிர்காலத்தில் வாங்க உள்ள கார் வரை நான் கற்பனை செய்து வைத்தவையே'' என்கிறார் நிவேதா.