மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி ஆகியோரது நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛கல்கி 2898 ஏடி'. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த 27ம் தேதி வெளியான இந்த படம் முதல் நாளில் 191.5 கோடி வசூலித்த நிலையில், இரண்டாவது நாள் முடிவில் 295.5 கோடி வசூலித்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
இதற்கு முன்பு பிரபாஸ் நடித்து வெளியான பாகுபலி- 2, சாஹோ, ஆதி புருஸ், சலார் ஆகிய நான்கு படங்களும் முதல் நாளில் 100 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில், தற்போது ஐந்தாவதாக இந்த கல்கி படமும் அந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது. மேலும், கல்கி படத்தின் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், கல்கி 2898 ஏடி படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு 60% முடிவடைந்து விட்டது. முக்கியமான காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது. இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் எப்போது என்று இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.