கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் | பீதியில் புரோட்டா காமெடியன் | 'டீசலுக்கு' வரவேற்பு உண்டு வருவாய் இல்லை: இயக்குனர் சண்முகம் | பிளாஷ்பேக்: திரைப் பிரபலங்களின் மாற்றத்திற்கு காரணியாய் இருந்த “ஸ்ரீமுருகன்” | ரசிகர் கொலை வழக்கில் நவ-6ல் நடிகர் தர்ஷன் உள்ளிட்ட அனைவரிடமும் வீடியோ கான்பரன்ஸ் விசாரணை | கேரள மாநில திரைப்பட அகாடமி தலைவராக ரசூல் பூக்குட்டி தேர்வு | லோகேஷ் கனகராஜ், வாமிகா கபி நடிக்கும் ‛டிசி' | உறவுகள் பொய் சொன்னால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது : தமன்னா | 15 வருடத்திற்கு பிறகு மலையாள படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுக்கும் மோகினி |

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி ஆகியோரது நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛கல்கி 2898 ஏடி'. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே கடந்த 27ம் தேதி வெளியான இந்த படம் முதல் நாளில் 191.5 கோடி வசூலித்த நிலையில், இரண்டாவது நாள் முடிவில் 295.5 கோடி வசூலித்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
இதற்கு முன்பு பிரபாஸ் நடித்து வெளியான பாகுபலி- 2, சாஹோ, ஆதி புருஸ், சலார் ஆகிய நான்கு படங்களும் முதல் நாளில் 100 கோடிக்கு மேல் வசூலித்த நிலையில், தற்போது ஐந்தாவதாக இந்த கல்கி படமும் அந்த பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது. மேலும், கல்கி படத்தின் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், கல்கி 2898 ஏடி படத்தின் இரண்டாம் பாகம் படப்பிடிப்பு 60% முடிவடைந்து விட்டது. முக்கியமான காட்சிகள் மட்டுமே படமாக்க வேண்டியுள்ளது. இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் எப்போது என்று இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.