ஜூலை 6ல் ராயன் இசை வெளியீட்டு விழா | ரிலீஸிற்கு முன்பே விருதுகளைக் குவிக்கும் ‛கொட்டுக்காளி' திரைப்படம் | ஹிந்திக்கு செல்லும் சிவகார்த்திகேயன் பட இயக்குனர் | நித்திலன் இயக்கத்தில் நயன்தாரா | சூர்யா, ரவிக்குமார் படம் எப்போது துவங்கும்? | சிறையில் குடும்பத்தினரிடம் கதறி அழுத தர்ஷன் | இந்தியன் 2 படத்தில் பயன்படுத்தப்பட்ட ஏஐ டெக்னாலஜி | 'தங்கலான், கங்குவா' படங்களுக்குக் கொடுக்கப்படும் செம 'பில்ட்-அப்' | திருமணத்திற்கு பின் மணமகள் சீரியலில் ரீ- என்ட்ரி கொடுத்த திருமகள் நடிகை | சரிகமப நிகழ்ச்சியில் ரசிகர்களை நெகிழச் செய்த ஆட்டோக்காரர்! |
சூரரைப்போற்று படத்தை அடுத்து மீண்டும் சூர்யா நடிப்பில் புறநானூறு என்ற படத்தை இயக்க திட்டமிட்டார் சுதா கொங்கரா. ஆனால் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருந்த நேரத்தில் திடீரென்று கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கப் போவதாக அறிவித்தார் சூர்யா. இதன் காரணமாக புறநானூறு படத்தை கிடப்பில் போட்டுவிட்டு இன்னொரு கதையை துருவ் விக்ரமை வைத்து இயக்க சுதா கொங்கரா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் தற்போது கிடப்பில் போட்டுள்ள புறநானூறு படத்தை தனுஷை வைத்து இயக்குவதற்கு சுதா கொங்கரா பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும், தற்போது தனுஷ் நடித்து வரும் ‛குபேரா' படத்தை அடுத்து அப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாகவும் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.