ரவிதேஜாவின் 76வது படம் ரிலீஸ் தேதியுடன் அறிவிப்பு | நடிகர் விநாயகனின் விமர்சனத்திற்கு நடிகர் சலீம் குமாரின் மகன் பதில் | தனுஷ் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் கிர்த்தி சனோன் | புதிய ஆரம்பம் - நடிகர் கிருஷ்ணா இரண்டாவது திருமணம் | பிரித்விராஜ் படத்திலிருந்து நீக்கப்பட்டேன் ; ஜோஜூ ஜார்ஜ் | மகளுக்கு டைட்டில் கார்டில் இடம் கொடுத்த மணிரத்னம் ; நன்றி சொன்ன குஷ்பு | 'கல்கி 2' படத்திலிருந்தும் தீபிகா படுகோனே விலகல்? | இந்தியன் 2 படத்தை விட குறைவாக வசூலித்த தக் லைப் | மீண்டும் தள்ளிப் போகும் 'ஹரிஹர வீர மல்லு' | சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? |
நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த 'கல்கி 2898 ஏடி' படம் நேற்று முன்தினம் வெளியானது. பேண்டஸி, சயின்ஸ் பிக்ஷன் படமாக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
திரையுலகப் பிரபலங்கள் பலரும் படத்தைப் பார்த்து பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், “கல்கி பார்த்தேன், வாவ்… என்ன ஒரு காவியம். இயக்குனர் நாக் அஷ்வின் இந்திய சினிமாவை மாறுபட்ட தளத்திற்குக் கொண்டு சென்றுவிட்டார். இரண்டாம் பாகத்திற்காக ஆவலுடன் காத்துள்ளேன்,” என்று படக்குழுவினர் அனைவரையும் பாராட்டியுள்ளார்.
அதற்கு பதிலளித்த இயக்குனர் நாக் அஷ்வின், “சார், பேச முடியவில்லை, எங்களது குழுவினர் உட்பட அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.