எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த 'கல்கி 2898 ஏடி' படம் நேற்று முன்தினம் வெளியானது. பேண்டஸி, சயின்ஸ் பிக்ஷன் படமாக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
திரையுலகப் பிரபலங்கள் பலரும் படத்தைப் பார்த்து பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், “கல்கி பார்த்தேன், வாவ்… என்ன ஒரு காவியம். இயக்குனர் நாக் அஷ்வின் இந்திய சினிமாவை மாறுபட்ட தளத்திற்குக் கொண்டு சென்றுவிட்டார். இரண்டாம் பாகத்திற்காக ஆவலுடன் காத்துள்ளேன்,” என்று படக்குழுவினர் அனைவரையும் பாராட்டியுள்ளார்.
அதற்கு பதிலளித்த இயக்குனர் நாக் அஷ்வின், “சார், பேச முடியவில்லை, எங்களது குழுவினர் உட்பட அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.