விஜய்யின் 'தி கோட்' - தமிழக உரிமை வாங்கியிருப்பது யார் தெரியுமா? | ஜூலை 5ல் 5 சிறிய படங்கள் மட்டுமே ரிலீஸ் | 'விடாமுயற்சி' முதல் பார்வை : விதவிதமான விமர்சனங்கள் | மூன்று படங்களில் ஏஐ தொழில்நுட்பத்தில் தோன்றும் விஜயகாந்த் | கங்குவா படம் பார்த்து மெய்சிலிர்த்தேன் : பாடலாசிரியர் விவேகா வெளியிட்ட பதிவு | கிரிக்கெட் வீரர் நடராஜன் வாழ்க்கை படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | கெட்டவனை அழிக்ககூடாது, கெட்டதைத்தான் அழிக்க வேண்டும் : விஜய் ஆண்டனி | 'நாகினி' ஹினா கானுக்கு புற்றுநோய் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் சோனாக்ஷி படம் | மம்தா மோகன்தாஸிற்கு சரும நோய் பாதிப்பு |
நாக் அஷ்வின் இயக்கத்தில், பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப்பச்சன், கமல்ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த 'கல்கி 2898 ஏடி' படம் நேற்று முன்தினம் வெளியானது. பேண்டஸி, சயின்ஸ் பிக்ஷன் படமாக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.
திரையுலகப் பிரபலங்கள் பலரும் படத்தைப் பார்த்து பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், “கல்கி பார்த்தேன், வாவ்… என்ன ஒரு காவியம். இயக்குனர் நாக் அஷ்வின் இந்திய சினிமாவை மாறுபட்ட தளத்திற்குக் கொண்டு சென்றுவிட்டார். இரண்டாம் பாகத்திற்காக ஆவலுடன் காத்துள்ளேன்,” என்று படக்குழுவினர் அனைவரையும் பாராட்டியுள்ளார்.
அதற்கு பதிலளித்த இயக்குனர் நாக் அஷ்வின், “சார், பேச முடியவில்லை, எங்களது குழுவினர் உட்பட அனைவரும் ஆசீர்வதிக்கப்பட்டோம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.