திருமணம் செய்து கொள்ளாதீர்கள்: நவாசுதீன் சர்ச்சை கருத்து | 3 நாளில் 415 கோடி வசூலித்த ‛கல்கி 2898 ஏடி' | 2025ம் ஆண்டில் துவங்கும் கைதி-2 | மிஸ்டர். எக்ஸ் படப்பிடிப்பு நிறைவு! | டைனோசர்ஸ் பட இயக்குனர் உடன் இணையும் சிம்பு! | இந்தியன்-2வில் கமலுடன் நடித்த அனுபவம்! - எஸ்.ஜே.சூர்யா தகவல் | இரண்டாவது நாளில் 298.5 கோடி வசூலித்த கல்கி 2898 ஏடி | சுந்தர். சியின் ‛ஒன் டூ ஒன்' படத்தின் டிரைலர் வெளியானது! | சூர்யா நடிக்க இருந்த புறநானூறு படத்தில் தனுஷ் நடிக்கிறாரா? | ஹரிஷ் கல்யாண் பிறந்த நாளில் வெளியான புதிய பட அறிவிப்பு! |
தமிழகத்தில் உள்ள தொகுதி வாரியாக 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு நடிகர் விஜய்யின், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா, சென்னையில் இன்று (ஜூன் 28) நடைபெற்றது. இந்தாண்டு இந்த விழாவை இன்று மற்றும் ஜூலை 3 என இரண்டு கட்டங்களாக நடக்கிறது.
விழா நடைபெறும் மண்டபத்திற்கு வந்த நடிகர் விஜய், நாங்குநேரியில் சாதிய தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சின்னதுரையின் அருகில் அமர்ந்தார். பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. விழாவில் மாணவர்கள் மத்தியில் விஜய் பேசியதாவது: எல்லா துறைகளும் நல்ல துறையே; நமக்கு பிடித்த துறைகளை தேர்ந்தெடுத்து 100 சதவீதம் உழைத்தால் வெற்றிதான். தமிழகத்திற்கு நல்ல தலைவர்களின் தேவை இருக்கிறது. தலைவர்கள் என்பது அரசியலில் மட்டும் சொல்லவில்லை; மாணவர்களான நீங்கள் செல்லும் துறைகளிலும் நல்ல தலைவர்கள் தேவை.
நல்லா படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்; தலைவர்களாக வரவேண்டும். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. இது ஒரு பெற்றோராகவும், அரசியல் இயக்க தலைவராகவும் எனக்கு அச்சமாக இருக்கிறது. ஆளும் அரசு தவற விட்டுட்டாங்க அப்படின்னு சொல்ல நான் இங்க வரல; அதற்கான மேடையும் இது இல்ல. நண்பர்கள் யாராவது தவறான பழக்கத்தில் ஈடுபட்டால் அவர்களை திருத்த முயலுங்கள். தவறான பாதையில் யாரும் ஈடுபடாதீர்கள்; அடையாளத்தை ஒருபோதும் இழக்காதீர்கள். இவ்வாறு அவர் பேசினார். இதனையடுத்து மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கினார்.