பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
ஷாரூக்கான் நடித்த 'ஜவான்' படத்திற்குப் பிறகு இந்திய அளவில் பிரபலமாகியவர் தமிழ் இயக்குனரான அட்லி. அந்தப் படத்திற்குப் பிறகு அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள படத்தை இயக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகின. அதற்கான கதையைக் கூட அவர் அல்லு அர்ஜுனிடம் சொல்லிவிட்டார் என்றார்கள்.
இந்நிலையில் அந்தப் படத்தைத் தற்போது 'டிராப்' செய்துவிட்டதாக டோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆரம்ப கட்ட நிலையிலேயே இப்படம் டிராப் ஆனதற்கான உண்மையான காரணம் இன்னும் தெரியவில்லை. இருந்தாலும் ஆந்திராவில் ஏற்பட்ட அரசியல் மாற்றமும் ஒரு காரணம் என்கிறார்கள்.
'புஷ்பா 2' படம் வெளிவந்த பிறகுதான் அல்லு அர்ஜுனின் திட்டம் என்னவாக இருக்கும் என்று தெரியுமாம். ஆந்திராவில் ஆட்சியை இழந்த ஒய்எஸ்ஆர் கட்சியைச் சேர்ந்த அவரது நண்பர் ரவி கிஷோருக்காக அவர் செய்த பிரச்சாரம் காரணமாக கடும் கமெண்ட்டுகள் வெளியானது. அது அல்லு அர்ஜுனின் எதிர்வரும் படங்களில் எப்படி எதிரொலிக்கும் என்பது போகப் போகத் தெரியும்.