300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர் பஹத் பாசில். அவருக்கு மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது.
தற்போது தமிழில் ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்', தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்தாலும் அவர்களது சம்பளம் சில கோடிகள் மட்டும்தான். மிகக் குறைந்த செலவில்தான் அங்கு படங்களைத் தயாரிப்பாளர்கள்.
மலையாளத்தில் குறைவான சம்பளம் வாங்கினாலும் மற்ற மொழிகளில் நடிக்கும் போது அதைவிட அதிக சம்பளம் வாங்குவது அவர்களது வழக்கம். பஹத் பாசில் தற்போது தெலுங்கில் நடித்து வரும் 'புஷ்பா 2' படத்திற்காக நாள் கணக்கில்தான் சம்பளம் வாங்குகிறாராம். ஒரு நாளைக்கு அவருக்கு 12 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறதாம்.
தமிழ், தெலுங்கில் நகைச்சுவை நடிகர்கள், குணச்சித்திர நடிகர்கள் இப்படித்தான் நாள் கணக்கு அடிப்படையில் சம்பளம் வாங்குவார்கள். அதிகபட்சமாக 5 லட்ச ரூபாய் வரை அவர்களுக்குத் தருவார்கள். தமிழில் தற்போது யோகி பாபு தான் இப்படி சம்பளம் வாங்கி வருகிறார்.