நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகர் பஹத் பாசில். அவருக்கு மலையாளத்தில் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நல்ல வரவேற்பு உள்ளது.
தற்போது தமிழில் ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்', தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிக்கும் 'புஷ்பா 2' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்தாலும் அவர்களது சம்பளம் சில கோடிகள் மட்டும்தான். மிகக் குறைந்த செலவில்தான் அங்கு படங்களைத் தயாரிப்பாளர்கள்.
மலையாளத்தில் குறைவான சம்பளம் வாங்கினாலும் மற்ற மொழிகளில் நடிக்கும் போது அதைவிட அதிக சம்பளம் வாங்குவது அவர்களது வழக்கம். பஹத் பாசில் தற்போது தெலுங்கில் நடித்து வரும் 'புஷ்பா 2' படத்திற்காக நாள் கணக்கில்தான் சம்பளம் வாங்குகிறாராம். ஒரு நாளைக்கு அவருக்கு 12 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறதாம்.
தமிழ், தெலுங்கில் நகைச்சுவை நடிகர்கள், குணச்சித்திர நடிகர்கள் இப்படித்தான் நாள் கணக்கு அடிப்படையில் சம்பளம் வாங்குவார்கள். அதிகபட்சமாக 5 லட்ச ரூபாய் வரை அவர்களுக்குத் தருவார்கள். தமிழில் தற்போது யோகி பாபு தான் இப்படி சம்பளம் வாங்கி வருகிறார்.