'குபேரா, சிதாரே ஜமீன் பர், டிஎன்ஏ' படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | 'கூலி' படத்தை கைப்பற்றிய நாகார்ஜூனா! | 'தி ராஜா சாப்' படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்துள்ள பிரபாஸ்! | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் மலையாள நடிகை! | வெற்றிமாறனுக்கு பதிலாக மலையாள இயக்குனர்.. சூர்யாவின் அதிரடி முடிவு! | இலங்கை பார்லிமென்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மோகன்லால் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக ஒரு வாரம் அவகாசம் நீட்டிப்பு | அப்படி செய்ய மாட்டேன் என பிடிவாதமாக நின்றார் நயன்தாரா ; பிரமிக்கும் யோகி பாபு | பஹத் பாசிலின் 'கராத்தே சந்திரன்' துவங்குவது எப்போது? | அஜித், சிவகார்த்திகேயன் படங்களில் மோகன்லால் |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் பிசியாக இசையமைத்து வருகிறார் அனிருத். தற்போது தமிழில் வேட்டையன், இந்தியன் 2 உள்பட பல படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், நயன்தாரா - விக்னேஷ் சிவன் நடத்தி வரும் டிவைன் புட்ஸ் என்ற நிறுவனத்தில் சமீபத்தில் முதலீடு செய்தார். அதையடுத்து தற்போது வி.எஸ்.மணி அண்ட் கோ என்ற பில்டர் காபி ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் ஒரு பங்குதாரராக இணைந்திருக்கிறார். அதோடு, இந்த நிறுவனத்தில் அவர் அம்பாசிடராகவும் உள்ளார். தமிழ்நாடு, கர்நாடகா என்ற இரண்டு மாநிலங்களிலும் செயல்பட்டு வரும் இந்த பில்டர் காபி நிறுவனத்தில் அனிருத் மட்டுமின்றி பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், நடிகை ஹூமா குரேஷி, தெலுங்கு நடிகர் ராணா உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் முதலீடு செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.