அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் இணைந்த ரெடின் கிங்ஸ்லி | ரசிகர்கள் அனைவரின் கண்களும் 'இந்தியன் 2' டிரைலரை நோக்கி… | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற லாரன்ஸ் | லெஜென்ட் சரவணனின் அடுத்த படம் துவங்கியது : துரை செந்தில்குமார் இயக்குகிறார் | ஊரைத் தெரிஞ்சிக்கிட்டேன்… - 100 மில்லியனைக் கடந்த முதல் 80ஸ் பாடல் | காக்கிச் சட்டையில் மீண்டும் கலக்கும் விஜயசாந்தி | அடுத்தடுத்த நஷ்டம் : அலுவலகத்தை விற்ற ரகுல் ப்ரீத் சிங் மாமனார் | திரையிசையில் தமிழ் வளர்த்த சிறுகூடல்பட்டி சித்தர் 'கவியரசர்' கண்ணதாசன் | ஏழு ஸ்வரங்களை நேசித்து, இசையை மட்டும் சுவாசித்த எம்எஸ் விஸ்வநாதன் | சோனியா அகர்வாலின் 'பிளாக் மேஜிக்' படம்: 5ம் தேதி வெளியாகிறது |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் பிசியாக இசையமைத்து வருகிறார் அனிருத். தற்போது தமிழில் வேட்டையன், இந்தியன் 2 உள்பட பல படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், நயன்தாரா - விக்னேஷ் சிவன் நடத்தி வரும் டிவைன் புட்ஸ் என்ற நிறுவனத்தில் சமீபத்தில் முதலீடு செய்தார். அதையடுத்து தற்போது வி.எஸ்.மணி அண்ட் கோ என்ற பில்டர் காபி ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் ஒரு பங்குதாரராக இணைந்திருக்கிறார். அதோடு, இந்த நிறுவனத்தில் அவர் அம்பாசிடராகவும் உள்ளார். தமிழ்நாடு, கர்நாடகா என்ற இரண்டு மாநிலங்களிலும் செயல்பட்டு வரும் இந்த பில்டர் காபி நிறுவனத்தில் அனிருத் மட்டுமின்றி பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், நடிகை ஹூமா குரேஷி, தெலுங்கு நடிகர் ராணா உள்ளிட்ட பல திரை பிரபலங்களும் முதலீடு செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.