தக்லைப் படத்தின் 'விண்வெளி நாயகா' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியானது! | நான் சந்தோஷத்தை வெளியில் தேடியது கிடையாது! - 'குபேரா' பட விழாவில் தனுஷ் பேச்சு | தோழிகள் படைசூழ தாய்லாந்து நாட்டிற்கு டூர் சென்ற கவுரி கிஷன்! | அந்தமான் செல்லும் சாய் தன்சிகா: ஏன் தெரியுமா? | பட விழாவுக்கு வரமுடியாததால் வீடியோகாலில் பேசிய யோகிபாபு | தமிழகத்திலும் அந்த படங்கள் வரும்: கஸ்துாரி கணிப்பு | தம்பிகளா, தள்ளிப்போய் விளையாடுங்க: தனுஷ் ஆவேசம் | பிறந்தநாளன்று இளையராஜா சொன்ன இனிப்பான செய்தி | 'தக் லைப்' படத்திற்கு கர்நாடகாவில் தடை: வழக்கு தொடர்ந்த கமல்ஹாசன் | விஜய் மில்டன் படத்தில் இணைந்த பரத் |
சினிமாவில் சிறு சிறு ரோல்களில் நடித்து பின் சின்னத்திரையில் ஹீரோயினாக களமிறங்கினார் பிரியங்கா நல்காரி. தமிழில் இவர் நடித்த ரோஜா சீரியலால் புகழின் உச்சத்திற்கு சென்றார். தொடர்ந்து ஜீ தமிழில் சீதா ராமன் தொடரில் ஹீரோயினாக கமிட்டானார். தனது நீண்டநாள் காதலரை மலேசியாவுக்கு சென்று திருமணம் செய்து கொண்ட பிரியங்கா கணவருக்காக நடிப்பதை கைவிடுவதாக சொன்னார். பின் கணவரை பிரிந்து வாழ்ந்த சில நாட்களில் மீண்டும் ஜீ தமிழில் நளதமயந்தி தொடரில் ஹீரோயினாகும் வாய்ப்பை பெற்றார். ஆனால், காதல் கணவருடன் மீண்டும் சேரவே அந்த தொடரிலிருந்தும் விலகி தற்போது மலேசியாவில் புதிதாக ஹோட்டல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதுதொடர்பாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு 'தொழிலதிபராக உணர்கிறேன்' என பெருமையாக பதிவிட்டுள்ளார்.