நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
சினிமாவில் சிறு சிறு ரோல்களில் நடித்து பின் சின்னத்திரையில் ஹீரோயினாக களமிறங்கினார் பிரியங்கா நல்காரி. தமிழில் இவர் நடித்த ரோஜா சீரியலால் புகழின் உச்சத்திற்கு சென்றார். தொடர்ந்து ஜீ தமிழில் சீதா ராமன் தொடரில் ஹீரோயினாக கமிட்டானார். தனது நீண்டநாள் காதலரை மலேசியாவுக்கு சென்று திருமணம் செய்து கொண்ட பிரியங்கா கணவருக்காக நடிப்பதை கைவிடுவதாக சொன்னார். பின் கணவரை பிரிந்து வாழ்ந்த சில நாட்களில் மீண்டும் ஜீ தமிழில் நளதமயந்தி தொடரில் ஹீரோயினாகும் வாய்ப்பை பெற்றார். ஆனால், காதல் கணவருடன் மீண்டும் சேரவே அந்த தொடரிலிருந்தும் விலகி தற்போது மலேசியாவில் புதிதாக ஹோட்டல் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதுதொடர்பாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டு 'தொழிலதிபராக உணர்கிறேன்' என பெருமையாக பதிவிட்டுள்ளார்.