'இட்லி கடை' படத்தின் முதல் பாதி ரெடி! | 'தேரே இஸ்க் மெயின்' படத்தில் பிரபுதேவா? | ரஜினியின் 'கூலி' படத்தின் ஹிந்தி பதிப்புக்கு டைட்டில் மாற்றம்! | தலையில் மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய அஜித்குமார்! | கொக்கைன் விவகாரத்தில் நடிகர் கிருஷ்ணாவுக்கு சம்மன் | சிம்புவின் 50வது படம் டிராப்பா? | ரசிகர்கள் விரும்பும் படத்தை கொடுக்கவில்லை: 'தக் லைப்' தோல்விக்கு மன்னிப்பு கேட்ட மணிரத்னம் | ஆக் ஷன் ஹீரோக்கள் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : கஜோல் | 'கேம் சேஞ்ஜர்' படத்துக்கு பச்சைக்கொடி காட்டியிருக்க கூடாது: தயாரிப்பாளர் தில் ராஜூ புலம்பல் | தமிழ்த் தலைப்புகளும், ஆங்கிலத் தலைப்புகளும் மோதும் ஜுன் 27 ரிலீஸ் |
மலையாளத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மம்முட்டி நடிப்பில் வெளியான படம் டர்போ. மம்முட்டியை வைத்து ஏற்கனவே போக்கிரி ராஜா, மதுர ராஜா என இரண்டு படங்களை இயக்கிய புலி முருகன் இயக்குனர் வைசாக் இந்த படத்தை இயக்கியிருந்தார். அதிரடி ஆக்ஷன் படமாக இது உருவாகி இருந்தாலும் கமர்சியலாக மிகப்பெரிய வரவேற்பை பெற தவறியது. இந்த படத்தில் ஆச்சரியமாக நடிகர் விஜய்சேதுபதி தனது குரல் மூலம் படத்தின் க்ளைமாக்ஸில் பங்களிப்பு செய்திருந்தார்.
அதாவது படம் முடிந்து விட்டது என்று நினைக்கும் நிலையில் இரண்டாம் பாகமும் இருக்கிறது என்று சொல்லும் விதமாக பின்னணியில் ஒலிக்கும் குரல் விஜய்சேதுபதியுடைய குரல் தான். இந்த நிலையில் படத்தில் அவரது பங்களிப்பிற்கு நடிகர் மம்முட்டி தனது நன்றியை தெரிவித்துள்ளதுடன் தாங்கள் இருவரும் இணைந்து இருப்பது போன்று டர்போ படத்தின் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.