'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
விஜய்சேதுபதி நடிப்பில் அடுத்து வெளிவரும் படம் 'மகாராஜா'. இது அவரின் 50வது படம். 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இயக்கி உள்ளார். மம்தா மோகன்தாஸ், அனுராக் காஷ்யப், பாரதிராஜா உள்பட பலர் நடித்துள்ளனர். வருகிற 14ம் தேதி படம் வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து படத்தின் புரமோஷன் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக விஜய் சேதுபதியின் 50வது படம் என்பதால் இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் துபாயில் உள்ள புர்ஜ் கலிபாவில் 'மகாராஜா' பட விளம்பரம் திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் அனுராக் கஷ்யப் கலந்து கொண்டார் மற்றும் நிகழ்வில் படக்குழுவினரும் இருந்தனர்.
இந்த நிகழ்ச்சியின்போது விஜய்சேதுபதி கண்கலங்கினார். அதற்கு காரணம் 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே புர்ஜ் கலிபாவின் அருகில் உள்ள இடத்தில் தான் விஜய்சேதுபதி கட்டிட பணியாளராக பணியாற்றினார். இப்போது தனது 50வது படத்தின் மூலம் புர்ஜ் கலிபாவின் உச்சியில் மின்னினார்.