ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
விஜய்சேதுபதி நடிப்பில் அடுத்து வெளிவரும் படம் 'மகாராஜா'. இது அவரின் 50வது படம். 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கிய நித்திலன் சாமிநாதன் இயக்கி உள்ளார். மம்தா மோகன்தாஸ், அனுராக் காஷ்யப், பாரதிராஜா உள்பட பலர் நடித்துள்ளனர். வருகிற 14ம் தேதி படம் வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து படத்தின் புரமோஷன் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக விஜய் சேதுபதியின் 50வது படம் என்பதால் இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் துபாயில் உள்ள புர்ஜ் கலிபாவில் 'மகாராஜா' பட விளம்பரம் திரையிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் அனுராக் கஷ்யப் கலந்து கொண்டார் மற்றும் நிகழ்வில் படக்குழுவினரும் இருந்தனர்.
இந்த நிகழ்ச்சியின்போது விஜய்சேதுபதி கண்கலங்கினார். அதற்கு காரணம் 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே புர்ஜ் கலிபாவின் அருகில் உள்ள இடத்தில் தான் விஜய்சேதுபதி கட்டிட பணியாளராக பணியாற்றினார். இப்போது தனது 50வது படத்தின் மூலம் புர்ஜ் கலிபாவின் உச்சியில் மின்னினார்.