சரத்குமாரின் ‛ஆழி' படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற ரசூல்பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறார் | ஜனநாயகன் படம் மறு தணிக்கை செல்கிறது : விரைவில் வெளியாகுமா? | ஹிந்தியில் ரீமேக் ஆகிறது தலைவர் தம்பி தலைமையில் | உணர்ச்சி பெருக்கில் மேடையில் அழுத பூமிகா | 'ஆவேஷம் 2': அப்டேட் கொடுத்த பஹத் பாசில் | 'கர' படத்தின் டப்பிங்கை நிறைவு செய்த தனுஷ் | கோடிகளில் சம்பளம்... ஆனாலும் மகிழ்ச்சி இல்லை : அனிருத் | பிளாஷ்பேக்: தமிழ் திரையிசையில் முதல் கானா பாடலை அறிமுகப்படுத்திய “பொம்மலாட்டம்” | 2046ல் என்ன நடக்கும் ? ரஜிஷா விஜயனின் புதிய படம் பதில் சொல்லும் | ஆல்பம் பாடலில் அதிர வைக்கும் அழகுடன் மஞ்சு வாரியர் |

தமிழ் சினிமாவில் பேய்ப் படங்களின் வருகையை ஆரம்பித்து வைத்த படம் என்றால் 2007ம் ஆண்டில் வந்த 'முனி' படம்தான். ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் ராஜ்கிரண், ராகவா லாரன்ஸ், வேதிகா மற்றும் பலர் நடித்தனர். இப்படம் பெரிய வெற்றியைக் குவித்தது.
அதற்கடுத்து அந்தப் படத்தின் அடுத்த பாகத்தை இயக்கும் போது அதற்கு 'காஞ்சனா' எனப் பெயர் வைத்தார் ராகவா லாரன்ஸ். அதன்பின் குழந்தைகள் கூட 'காஞ்சனா பேய்' என அழைக்க ஆரம்பித்ததால் அதற்கடுத்த பாகங்களும் காஞ்சனா 2, காஞ்சனா 3 என்ற பெயரிலேயே வெளிவந்தது.
'முனி' என்ற முதல் பாகத்தின் தொடர்ச்சி என்று பார்த்தால் 'முனி' 4ம் பாகமாக 'காஞ்சனா 3' படம் 2019ல் வெளிவந்தது. இப்போது 'காஞ்சனா 4'ம் பாகத்தை ராகவா லாரன்ஸ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செப்டம்பர் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது.
சமீபத்தில் சுந்தர் சி இயக்கிய நடித்து வெளிவந்த 'அரண்மனை 4' படம் வெற்றி பெற்று 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதனால்தான் 'காஞ்சனா 4' படத்தையும் தைரியமாக எடுக்க உள்ளதாகத் தெரிகிறது.
2025ம் ஆண்டு கோடை விடுமுறையில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.




