நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
'எப்ஐஆர்' படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கவுதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியர், அனகா, ரைசா வில்சன், அதுல்யா மற்றும் பலர் நடிக்கும் படம் 'மிஸ்டர் எக்ஸ்'.
இப்படத்தில் ஆர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. “மிஸ்டர் எக்ஸ்' ஆக உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மாறியது மிகவும் உற்சாகமானது. என்ன வரப் போகிறது என்பதைக் காண ஆர்வமாக உள்ளேன்,” என அது குறித்து ஆர்யா குறிப்பிட்டுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து ஆர்யா அடுத்து 'சார்பட்டா பரம்பரை 2' படத்தில் நடிக்க உள்ளார். 'தங்கலான்' படத்தின் வேலைகள் தாமதம் ஆவதால் பா.ரஞ்சித் அதில் பிஸியாக உள்ளார். அதை முடித்துக் கொடுத்த பின் 'சார்பட்டா பரம்பரை 2' ஆரம்பமாகிவிடும் எனத் தெரிகிறது.