'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ் சினிமாவில் குறைவான படங்களில் நடித்தாலும் அந்த படங்களின் மூலமாக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நிவேதா பெத்துராஜ். நடிப்பு மட்டுமல்லாமல், பார்முலா கார் பந்தயத்திலும் பங்கேற்று கவனம் ஈர்த்தார். சமீபத்தில் பாட்மின்டன் போட்டியிலும் பங்கேற்று சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தினார். இப்படி பல்வேறு திறமைகளை பெற்றவர் நிவேதா பெத்துராஜ்.
தற்போது அவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் நிவேதா பெத்துராஜின் காரை தடுத்து நிறுத்திய போலீசார் அவரின் கார் டிக்கியை திறக்கச் சொல்லி கேட்கிறார்கள். "சாலையில் செல்கிறேன். பேப்பர்கள் எல்லாம் சரியா இருக்கு” என்று நிவேதா பெத்துராஜ் சொல்லியும் போலீசார் கேட்கவில்லை.
'எங்களின் கடமை' எனக்கூறி, கார் டிக்கியை திறக்க வேண்டும் என சொன்னார்கள். ஆனால் சொல்வதைக் கேட்காமல், 'அதில் எதுவும் இல்லை, திறக்க முடியாது. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் சார். இது மரியாதைக்குரிய விஷயம்' என்று நிவேதா கூறுகிறார். சாலையில் போலீசாருடன் நிவேதா பெத்துராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது. இது உண்மையில் நடைபெற்றதா அல்லது ஏதேனும் படத்தின் புரமோஷனா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.