சிவகார்த்திகேயன் 24வது படம் தள்ளிப்போகிறதா? | தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் |
தமிழ் சினிமாவில் குறைவான படங்களில் நடித்தாலும் அந்த படங்களின் மூலமாக தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நிவேதா பெத்துராஜ். நடிப்பு மட்டுமல்லாமல், பார்முலா கார் பந்தயத்திலும் பங்கேற்று கவனம் ஈர்த்தார். சமீபத்தில் பாட்மின்டன் போட்டியிலும் பங்கேற்று சாம்பியன் பட்டத்தையும் வென்று அசத்தினார். இப்படி பல்வேறு திறமைகளை பெற்றவர் நிவேதா பெத்துராஜ்.
தற்போது அவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் நிவேதா பெத்துராஜின் காரை தடுத்து நிறுத்திய போலீசார் அவரின் கார் டிக்கியை திறக்கச் சொல்லி கேட்கிறார்கள். "சாலையில் செல்கிறேன். பேப்பர்கள் எல்லாம் சரியா இருக்கு” என்று நிவேதா பெத்துராஜ் சொல்லியும் போலீசார் கேட்கவில்லை.
'எங்களின் கடமை' எனக்கூறி, கார் டிக்கியை திறக்க வேண்டும் என சொன்னார்கள். ஆனால் சொல்வதைக் கேட்காமல், 'அதில் எதுவும் இல்லை, திறக்க முடியாது. தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் சார். இது மரியாதைக்குரிய விஷயம்' என்று நிவேதா கூறுகிறார். சாலையில் போலீசாருடன் நிவேதா பெத்துராஜ் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது. இது உண்மையில் நடைபெற்றதா அல்லது ஏதேனும் படத்தின் புரமோஷனா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை.