எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் | கேன்ஸில் பிரதிபலித்த ‛சிந்தூர்' : பார்வையாளர்களை கவர்ந்த ஐஸ்வர்யா ராய், அதிதி ராவ் | காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டார் | போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது | மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா நியமனம் : வலுக்கும் எதிர்ப்பு |
ஷாருக்கான் நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கிய அட்லி அடுத்தபடியாக தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் போகிறார். இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி மற்றும் அல்லு அர்ஜுனின் புஷ்பா- 2 படங்களை தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை இயக்குவதற்காக இந்திய சினிமாவில் இதுவரை யாரும் வாங்காத ஒரு பெரிய சம்பளத்தை அட்லி வாங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், புஷ்பா-2 படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி உள்ளதால் வெகு விரைவிலேயே அல்லு அர்ஜுன், அட்லி இணையும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. தற்போது அப்படத்தின் ஆரம்ப கட்டப் பணிகளை அட்லி தொடங்கி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.