தென்கரையில் டி.ஆர்.மகாலிங்கம் சிலை திறப்பு விழா : பி.சுசீலா, நாசர் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பங்கேற்பு | குரங்கு பொம்மை - மகாராஜா கிளைமாக்ஸ் ; ஒரு ஆச்சரிய ஒப்பீடு | கமல் பயோபிக்: ஸ்ருதிஹாசன் சொன்ன "நச்" பதில் | கையில் கோப்பையுடன் நீச்சல் குளத்தில் பாடகி ஜொனிதா காந்தி! | கருடன் பட வில்லன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு | உலக தந்தையர் தினம் - மகன்களுடன் விக்னேஷ் சிவன் விளையாடி மகிழும் வீடியோவை வெளியிட்ட நயன்தாரா!! | உயிர்த்தோழியை குப்பைத்தொட்டி ஆக்கிய ஜனனி! | கருடன் - 50 கோடியை நெருங்கும் வசூல்…ஆனாலும்… | 'கல்கி 2898 எடி' விழாவை பிரம்மாண்டமாக நடத்தத் திட்டம் | அல்லு அர்ஜுன் - அட்லி படம் 'டிராப்'? |
கடந்த 2022ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான லூசிபர் படத்தை தெலுங்கில் காட்பாதர் என்ற பெயரில் சிரஞ்சீவி வைத்து ரீமேக் செய்தார் மோகன் ராஜா. அப்படத்தில் சிரஞ்சீவியுடன் நயன்தாரா, சல்மான் கான் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்தார்கள். இந்த நிலையில் தற்போது மீண்டும் சிரஞ்சீவி நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் போகிறார் மோகன்ராஜா. பி.வி.எஸ். ரவி என்பவர் இந்த படத்திற்கு கதை எழுதும் நிலையில் தற்போது ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஜூன் ஒன்றாம் தேதி இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது. மேலும், அடுத்தபடியாக தனி ஒருவன்- 2 படத்தை மோகன் ராஜா இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சிரஞ்சீவி படத்தை இயக்கப் போவதால் அதை முடித்துவிட்டு அப்படத்தை அவர் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது. அதோடு, விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களுக்கு பிறகு அஜித் நடிக்கும் ஒரு படத்தையும் இயக்கப் போகிறார் மோகன் ராஜா.