விக்ரம் 63வது படத்தை இயக்கும் அறிமுக இயக்குனர் | என்னுடைய டேஸ்ட்டே வேற! சொல்கிறார் ஸ்ரீ லீலா | கவுரி கிஷனின் பேராசை | திரையரங்குகளில் வசூலை வாரி குவிந்த படங்கள்....இந்த வார ஓடிடி ரிலீஸ்.......! | மாத செலவுக்கு ரூ.6.5 லட்சம் மாதம்பட்டி ரங்கராஜ் தர வேண்டும்; ஜாய் கிரிசில்டா மனு | ராஷ்மிகாவுக்கு ஜோடியாக கன்னட நடிகர் ஏன் ? ; 'தி கேர்ள் பிரண்ட்' இயக்குனர் விளக்கம் | மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து ஒரு கதாநாயகி | தொடர்ந்து தெலுங்கு இயக்குநர்களிடம் கதை கேட்கும் சூர்யா | லோகேஷ் கனகராஜ் ஜோடியான வாமிகா கபி | மீண்டும் ரஜினியுடன் இணையும் சந்தானம் |

கடந்த 2022ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான லூசிபர் படத்தை தெலுங்கில் காட்பாதர் என்ற பெயரில் சிரஞ்சீவி வைத்து ரீமேக் செய்தார் மோகன் ராஜா. அப்படத்தில் சிரஞ்சீவியுடன் நயன்தாரா, சல்மான் கான் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்தார்கள். இந்த நிலையில் தற்போது மீண்டும் சிரஞ்சீவி நடிப்பில் ஒரு படத்தை இயக்கப் போகிறார் மோகன்ராஜா. பி.வி.எஸ். ரவி என்பவர் இந்த படத்திற்கு கதை எழுதும் நிலையில் தற்போது ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஜூன் ஒன்றாம் தேதி இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது. மேலும், அடுத்தபடியாக தனி ஒருவன்- 2 படத்தை மோகன் ராஜா இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சிரஞ்சீவி படத்தை இயக்கப் போவதால் அதை முடித்துவிட்டு அப்படத்தை அவர் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது. அதோடு, விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களுக்கு பிறகு அஜித் நடிக்கும் ஒரு படத்தையும் இயக்கப் போகிறார் மோகன் ராஜா.