20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
மாவீரன், அயலான் படங்களுக்கு பிறகு ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் அமரன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடிக்க, ஜி.வி . பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இதையடுத்து படக்குழுவினருக்கு நடிகர் சிவகார்த்திகேயன் பிரியாணி விருந்து கொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார். இதை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், அதன்பிறகு டான் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார்.