சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

சமீபகாலமாக வெளியாகும் மலையாள படங்கள் கேரளாவையும் தாண்டி தென்னிந்திய மொழிகளிலும் மிகப்பெரிய வரவேற்பை பெறுகின்றன. நல்ல வசூலையும் ஈட்டுகின்றன. ஒரு பக்கம் இப்படி மலையாள படங்களை பற்றி பிரமிப்புடன் பேசினாலும் இன்னொரு பக்கம் இப்படி சமீப காலமாக வெற்றி பெற்ற படங்களில் கதாநாயகிகள் என்கிற கதாபாத்திரமே இல்லை என்பதும் குறிப்பாக சாதாரண பெண் கதாபாத்திரங்கள் கூட அதிகப்படியாக பயன்படுத்தப்படவில்லை என்பதும் மலையாள திரையுலகில் விவாத பொருளாக மாறி உள்ளது.
குறிப்பாக மஞ்சும்மேல் பாய்ஸ், மம்முட்டியின் பிரம்மயுகம், கண்ணூர் ஸ்குவாட், பஹத் பாசிலின் ஆவேசம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகிகளே இடம்பெறவில்லை. இந்த நிலையில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் இயக்கி வரும் 'பெங்களூர் டேய்ஸ்' புகழ் இயக்குனர் அஞ்சலி மேனன், மலையாள சினிமாவில் பெண்கள் எங்கே போனார்கள் என தனது சோசியல் மீடியா பக்கத்தில் ஒரு கேள்வியை எழுப்பி உள்ளார்.
குறிப்பாக ஆவேசம் படத்தில் இடம்பெறும் கல்லூரி காட்சிகளில் பெண்களை அதிகம் காட்டுவதற்கு வாய்ப்பு இருந்தும் கூட ஒரு மாணவனின் தாயார் என்கிற ஒரே ஒரு பெண் கதாபாத்திரத்தை மட்டும் காட்டி பெண்களுக்கான முக்கியத்துவத்தை குறைத்து விட்டார்கள் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இந்த படங்களின் இயக்குனர்கள் இது பற்றி கூறும்போது கதைக்கு தேவையான கதாபாத்திரங்களை மட்டுமே படத்தில் இடம்பெறச் செய்துள்ளோம் என்று கூறுகின்றனர்.




