தனுஷ் 54வது படத்தில் இணைந்தது குறித்து பிரித்வி பாண்டியராஜன் நெகிழ்ச்சி! | சிவராஜ் குமாரின் 131வது படம் அறிவிப்பு | 'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் |
ஆஸ்கர் நாயகன் என அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் எண்ணற்ற விருதுகளை வென்றவர். சர்வதேச விருதுகள், இந்திய விருதுகள் என பல விருதுகள் அவருக்குக் கிடைத்துள்ளன.
சமீபத்திய பேட்டி ஒன்றில் அப்படிப்பட்ட விருதுகளைப் பற்றிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில், “விருதுகளை அறையில் வைத்துள்ளேன். சில விருதுகள் என்னிடம் வரவேயில்லை. அந்த விருதுகளை அப்படங்களின் இயக்குனர்களே வைத்துக் கொண்டுள்ளார்கள். சர்வதேச விருதுகளை துபாயில் வைத்துள்ளேன். அவற்றை தங்கம் என நினைத்து எனது அம்மா டவலில் சுற்றி வைத்துள்ளார். மற்ற விருதுகள் சென்னையில் உள்ள அறையில் இருக்கின்றன” என்றார்.
ஏஆர் ரஹ்மானுக்காக அளிக்கப்பட்ட விருதுகளை சில இயக்குனர்கள் அவரிடம் திருப்பித் தராமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. அவர் அளித்த பேட்டியில் பேட்டியாளர் ரஹ்மான் வாங்கிய தேசிய விருதுகள், பிலிம்பேர் விருதுகள் பற்றி தவறான எண்ணிக்கையைச் சொன்னார். ஏஆர் ரஹ்மான் அவற்றைத் திருத்தி சரியான எண்ணிக்கை என்ன என்பதையும் கூறினார். தான் வாங்கிய விருதுகள் எத்தனையெத்தனை என்பதை மிகவும் ஞாபகமாக வைத்திருக்கிறார் ஏஆர் ரகுமான்.
இந்தப் பேட்டியைப் பார்த்த பிறகாவது ரஹ்மானின் விருதுகளை வைத்திருக்கும் அந்த இயக்குனர்கள் அவற்றைத் திருப்பித் தருவது நல்லது.