இசையமைப்பாளர் இளையராஜா அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் | பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளில் 'ஜனநாயகன்' படக்குழு வெளியிட்ட போஸ்டர்! | 'டியூட்' படத்திற்காக இரவு முழுக்க தூங்காமல் பயிற்சி எடுத்த மமிதா பைஜு! | அல்லு அர்ஜுனை தொடர்ந்து 'கேஜிஎப்' நாயகன் யஷை இயக்கும் அட்லி! | ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' |
ஆஸ்கர் நாயகன் என அழைக்கப்படும் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் எண்ணற்ற விருதுகளை வென்றவர். சர்வதேச விருதுகள், இந்திய விருதுகள் என பல விருதுகள் அவருக்குக் கிடைத்துள்ளன.
சமீபத்திய பேட்டி ஒன்றில் அப்படிப்பட்ட விருதுகளைப் பற்றிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில், “விருதுகளை அறையில் வைத்துள்ளேன். சில விருதுகள் என்னிடம் வரவேயில்லை. அந்த விருதுகளை அப்படங்களின் இயக்குனர்களே வைத்துக் கொண்டுள்ளார்கள். சர்வதேச விருதுகளை துபாயில் வைத்துள்ளேன். அவற்றை தங்கம் என நினைத்து எனது அம்மா டவலில் சுற்றி வைத்துள்ளார். மற்ற விருதுகள் சென்னையில் உள்ள அறையில் இருக்கின்றன” என்றார்.
ஏஆர் ரஹ்மானுக்காக அளிக்கப்பட்ட விருதுகளை சில இயக்குனர்கள் அவரிடம் திருப்பித் தராமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. அவர் அளித்த பேட்டியில் பேட்டியாளர் ரஹ்மான் வாங்கிய தேசிய விருதுகள், பிலிம்பேர் விருதுகள் பற்றி தவறான எண்ணிக்கையைச் சொன்னார். ஏஆர் ரஹ்மான் அவற்றைத் திருத்தி சரியான எண்ணிக்கை என்ன என்பதையும் கூறினார். தான் வாங்கிய விருதுகள் எத்தனையெத்தனை என்பதை மிகவும் ஞாபகமாக வைத்திருக்கிறார் ஏஆர் ரகுமான்.
இந்தப் பேட்டியைப் பார்த்த பிறகாவது ரஹ்மானின் விருதுகளை வைத்திருக்கும் அந்த இயக்குனர்கள் அவற்றைத் திருப்பித் தருவது நல்லது.