அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து |
இசை அமைப்பாளர் இளையராஜா மீது தற்போது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பாடல்களுக்கு உரிமை கேட்டு வீண் பிரச்னை கிளப்புகிறா என விமர்னங்கள் வந்து கொண்டிருக்கம் நிலையில் நேற்று திடீரென ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் அவர் பேசியிருப்பதாவது:
தினமும் என்னை பற்றி ஏதோ ஒரு வகையில் வீடியோக்கள் வந்துகொண்டிருப்பதாக வேண்டியவர்கள் வந்து சொல்வார்கள். நான் இதிலெல்லாம் கவனம் செலுத்துவது இல்லை. ஏனெனில் மற்றவர்களை கவனிப்பது என் வேலையில்லை. நான் என் வழியில் ரொம்ப சுத்தமாக போய்க் கொண்டு இருக்கிறேன். நீங்கள் என்னை வாழ்த்தி கொண்டிருக்கும் நேரத்தில், கடந்த ஒரு மாதத்தில் ஒரு சிம்பொனியை எழுதி முடித்து விட்டேன். இங்கே பாடல்களை முடித்துவிட்டு, இடையே சில இடங்களுக்கும், விழாக்களுக்கும் தலைகாட்டி கொண்டிருக்கிறேன்.
ஒரு சிம்பொனியை 35 நாட்களில் முழுவதுமாக எழுதி முடித்திருக்கிறேன். இது எனக்கு சந்தோஷமான செய்தி. அதை உங்களுக்கு சொல்லி கொள்கிறேன். ஏனெனில் படத்துக்கான இசை வேறு. பின்னணி இசை வேறு. இதெல்லாம் பிரதிபலித்தால் அது சிம்பொனி ஆகாது. எனவே ஒரு சுத்தமான சிம்பொனியாக எழுதி முடித்திருக்கிறேன். உற்சாகமான இந்த செய்தியை ரசிகர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அதில் இளையராஜா கூறியுள்ளார்.