வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

இசை அமைப்பாளர் இளையராஜா மீது தற்போது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பாடல்களுக்கு உரிமை கேட்டு வீண் பிரச்னை கிளப்புகிறா என விமர்னங்கள் வந்து கொண்டிருக்கம் நிலையில் நேற்று திடீரென ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் அவர் பேசியிருப்பதாவது:
தினமும் என்னை பற்றி ஏதோ ஒரு வகையில் வீடியோக்கள் வந்துகொண்டிருப்பதாக வேண்டியவர்கள் வந்து சொல்வார்கள். நான் இதிலெல்லாம் கவனம் செலுத்துவது இல்லை. ஏனெனில் மற்றவர்களை கவனிப்பது என் வேலையில்லை. நான் என் வழியில் ரொம்ப சுத்தமாக போய்க் கொண்டு இருக்கிறேன். நீங்கள் என்னை வாழ்த்தி கொண்டிருக்கும் நேரத்தில், கடந்த ஒரு மாதத்தில் ஒரு சிம்பொனியை எழுதி முடித்து விட்டேன். இங்கே பாடல்களை முடித்துவிட்டு, இடையே சில இடங்களுக்கும், விழாக்களுக்கும் தலைகாட்டி கொண்டிருக்கிறேன்.
ஒரு சிம்பொனியை 35 நாட்களில் முழுவதுமாக எழுதி முடித்திருக்கிறேன். இது எனக்கு சந்தோஷமான செய்தி. அதை உங்களுக்கு சொல்லி கொள்கிறேன். ஏனெனில் படத்துக்கான இசை வேறு. பின்னணி இசை வேறு. இதெல்லாம் பிரதிபலித்தால் அது சிம்பொனி ஆகாது. எனவே ஒரு சுத்தமான சிம்பொனியாக எழுதி முடித்திருக்கிறேன். உற்சாகமான இந்த செய்தியை ரசிகர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அதில் இளையராஜா கூறியுள்ளார்.




