கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் 'பெருசு' | கார் ரேஸ் : அஜித்திற்கு குவியும் வாழ்த்துகள் | மோகன்லாலை இயக்கும் தமிழ் இயக்குனர் | வெற்றிமாறன் - தனுஷ், மதிமாறன் புகழேந்தி - சூரி : ஒரேநாளில் இரு பட அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம் | பிளாஷ்பேக்: கே பாக்யராஜ் என்ற புதிய நாயகனை வார்த்தெடுத்த “புதிய வார்ப்புகள்” | பிரபாஸின் மணப்பெண் இந்த ஊரை சேர்ந்தவர்: நடிகர் ராம்சரண் கொடுத்த 'க்ளூ' | பவன் கல்யாண் பட அக்ரிமெண்டில் சிக்கி பட வாய்ப்புகளை இழந்த நிதி அகர்வால் | உயிரோடு இருப்பேனா என அச்சம் ஏற்பட்டது ; லாஸ் ஏஞ்சல்ஸ் தீ விபத்தில் இருந்து தப்பிய ப்ரீத்தி ஜிந்தா | ரஜினியின் பில்லா தோல்வி படமா? - விஷ்ணுவர்தனுக்கு கண்டனம் | நடிகை ஹனிரோஸ் மீதான சர்ச்சை கருத்து.. முன்ஜாமின் விண்ணப்பித்த மீடியா ஆர்வலர் |
ஹிந்தி நடிகர் ரன்வீர் சிங்கும், நடிகை தீபிகா படுகோனேவும் காதலித்து கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள். திருமணமாகி ஆறு ஆண்டுகள் ஆகும் நிலையில் கடந்த பிப்ரவரியில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் தீபிகா. தற்போது இருவரும் தங்களது குழந்தையின் வருகையை எதிர்நோக்கி மகிழ்ச்சியுடன் காத்துக் கொண்டிருப்பதாக பேட்டிகளில் கூறி வருகிறார்கள்.
இந்த நேரத்தில் ரன்வீர் சிங் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த திருமண புகைப்படங்களை திடீரென்று நீக்கியுள்ளார். இதனால் பாலிவுட் மீடியாக்களில் ரன்வீர் சிங்கும், தீபிகாவும் பிரியப் போவதாக ஒரு பரபரப்பு செய்தி வெளியானது .
அதையடுத்து ரன்வீர் சிங் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். அதில், என்னுடைய இன்ஸ்டா பக்கத்திலிருந்து திருமண புகைப்படங்களை நீக்கவில்லை. அதை ஆர்கேவ் செய்து வைத்திருக்கிறேன் என்று உடனடியாக ஒரு தகவல் வெளியிட்டு அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். மேலும் தற்போது ரன்வீர் சிங்கும், தீபிகா படுகோனேவும் சிங்கம் அகைன் என்ற படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.