ரோட்டர்டாம் திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛மயிலா' | ரஜினி - கமல் இணையும் படம் குறித்து அப்டேட் கொடுத்த சவுந்தர்யா ரஜினி - ஸ்ருதிஹாசன்! | சமந்தாவின் 'மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு தொடங்கியது! | கரூர் சம்பவம் தொடர்பாக விஜய்யை விமர்சித்தாரா சூரி? -அவரே கொடுத்த விளக்கம் | பிரபாஸ் படத்தில் நடிக்கும் பழம்பெரும் நடிகை காஞ்சனா | 'காந்தாரா சாப்டர் 1' படத்திற்கு அல்லு அர்ஜுன் பாராட்டு | விஷ்ணு விஷால் என் என்ஜினை ஸ்டார்ட் செய்து வைத்தார் : கருணாகரன் | ஒரே ஆண்டில் தமிழில் இரண்டு வெற்றிப் படங்களில் அனுபமா பரமேஸ்வரன் | மாஸ்க் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ஓடிடியில் அடுத்த வாரம் வரும் 'லோகா' |

மலையாளத்தில் பாசில் இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா, சுரேஷ் கோபி உள்ளிட்ட பலரது நடிப்பில் 1993ம் ஆண்டு வெளியான படம் மணிசித்திரதாழு. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு திரைக்கு வந்த இந்த படம் அப்போது 7 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இந்த படத்தை தான் பின்னர் கன்னடத்தில் ஆப்தமித்ரா, தமிழில் சந்திரமுகி என்ற பெயரில் ரீமேக் செய்தார் பி. வாசு.
தமிழில் ரஜினி, ஜோதிகா, நயன்தாரா நடித்த சந்திரமுகி படம் சென்னையில் மட்டும் ஓராண்டு ஓடி வசூல் சாதனை செய்தது. இந்த நிலையில் தற்போது மணிசித்திரதாழு படம் குறித்து போஸ்டருடன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்கிறார் இயக்குனர் செல்வராகவன். அதில், ‛மணிசித்திரதாழு படத்தை கிட்டத்தட்ட 50 முறை பார்த்திருக்கிறேன். இயக்குனர் பாசில் அவர்களின் கிளாசிக் படம் இது. ஷோபனா சிறப்பாக நடித்து தேசிய விருது வாங்கினார். மோகன்லால் அவர்களால் இந்த தேசத்துக்கே பெருமை' என்று பதிவிட்டு இருக்கிறார் செல்வராகவன்.




