படப்பிடிப்பிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய ஸ்ருதிஹாசன் | மாயவன் 2-வாக உருவாகும் ‛மாயா ஒன்' : முதல் பார்வை வெளியீடு | சினிமாவிற்கு முழுக்கா... - கங்கனா பதில் | கலகலப்பு மூன்றாம் பாகத்தை இயக்க தயாராகும் சுந்தர்.சி | விமல் நடிப்பில் "போகுமிடம் வெகு தூரமில்லை" | நயன்தாராவின் ‛டியர் ஸ்டூடண்ட்ஸ்' படப்பிடிப்பு துவங்கியது | டில்லி ஹனுமான் கோவிலில் நடக்கும் தக்லைப் படப்பிடிப்பு | ஸ்டார் படத்திற்கு தணிக்கை குழு 'யு' சான்றிதழ் | ‛ஹவுஸ்புல் 5' - மீண்டும் அபிஷேக் பச்சனை அழைத்து வரும் சஜித் நதியத்வாலா | சீரியலை விட்டு தூக்கிய சோகத்தில் பிரியங்கா நல்காரி - நடந்தது என்ன? |
மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் அறிமுகமானவர் கெளதம். நடிகர் கார்த்திக்கின் மகனான இவர் அந்த படத்தை பெரிய அளவில் எதிர்பார்த்தார். ஆனால் படம் படுதோல்வியடைந்து அவரை ஏமாற்றி விட்டது. இருப்பினும், உடனடியாக சில கம்பெனிகளிடம் பேசி வந்த கார்த்திக், இப்போது மகனை இரண்டு படங்களில் ஒப்பந்தம செய்து விட்டார். அதில் ஒரு படத்தை 3 படத்தை இயக்கிய ஐஸ்வர்யா தனுஷ் இயக்குகிறார். கல்பாத்தி அகோரம் படத்தை தயாரிக்கிறார்.
அப்படத்துக்கு வை ராஜா வை என்று பெயரிட்டுள்ள ஐஸ்வர்யா தனுசுக்கும் முதல் படம் சற்று சறுக்கி விட்டதால், இந்த முறை எப்படியேனும் வெற்றி பெற்று வெற்றிப்பட இயக்குனர் பட்டியிலில் இடம் பிடித்து விட வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறார். அதனால் முதல் படத்தில் செய்த சில தவறுகளை இந்த படத்தில் செய்யாமல் பக்காவாக படத்தை இயக்க வேண்டும் என்று கதை விவாதம் செய்து வருகிறார்.
மேலும், யுவன்ஷங்கர்ராஜா இசையமைக்கும் இப்படத்தில் ஜெய், பூர்ணிமா ஆகியோரும் நடிக்கிறார்கள். ஆனால் கெளதமுக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்பது இன்னும் முடிவாகவில்லையாம். தொடர்ந்து நாயகி தேர்வு நடத்தி வருகிறார் ஐஸ்வர்யா தனுஷ்.