ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
நடிகர் விஜய் நேற்று சென்னையில் தனது வீடு அமைந்துள்ள நீலாங்கரை ஓட்டுச்சாவடிக்கு வந்து தனது ஓட்டை பதிவு செய்தார். தற்போது ரஷ்யாவில் கோட் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ஓட்டு அளிக்க வேண்டும் என்பதற்காகவே அங்கிருந்து சென்னை வந்திருக்கிறார் விஜய். மேலும் அவர் ஓட்டுச்சாவடிக்கு வந்தபோது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி மீடியாக்களும் போட்டோகிராபர்களும் விஜய்யை சூழ்ந்து கொண்டார்கள். இதனால் போலீஸ் பாதுகாப்போடு ஓட்டளித்துவிட்டு சென்றார் விஜய்.
இந்த நிலையில் விஜய் மீது சென்னையைச் சார்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்திருக்கிறார். அதில், விஜய் ஓட்டளிக்க வரும்போது தன்னுடன் 200க்கும் மேற்பட்ட ரசிகர்களை அழைத்து வந்தார். இப்படி ஒருவர் மட்டுமே ஓட்டளிக்க 200 பேரை அழைத்து வந்ததால் அந்த ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்க வந்திருந்த பொது மக்களுக்கு இடையூறு ஏற்பட்டது. அதனால் தேர்தல் விதிகளை மீறிய விஜய் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த புகார் அடிப்படையில் விஜய் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பார்களா? இல்லையா? என்பது விரைவில் தெரியவரும்.