ராஜா சாப் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு : டிச., 5ல் வெளியாகிறது | கன்னட மொழியை சிறுமைப்படுத்தவில்லை : நடக்கும் பிரச்னை வேதனை அளிப்பதாக கமல் அறிக்கை | பரமசிவன் பாத்திமாவுக்கு மறு தணிக்கையில் 'ஏ ' சான்றிதழ் | பிளாஷ்பேக்: ஹீரோயின்கள் ஆன லலிதா, பத்மினி | தமிழுக்கு வரும் ஸ்ராவணி ஷெட்டி | பிலிம் சேம்பர் மூலம் கட்டண உயர்வுக்கு விண்ணப்பித்த பவன் கல்யாண் படத் தயாரிப்பாளர் | பிளாஷ்பேக் : விசு இயக்கிய கமர்சியல் ஆக்சன் படம் | ஜுன் 5, 6ல் 4 படங்கள் ரிலீஸ் | கன்னட, தமிழ் விவகாரம் : கமல் மன்னிப்பு கேட்டால் என்ன...? : 2:30 மணி வரை கெடு விதித்த கர்நாடகா ஐகோர்ட் | சினிமாவில் பிஸி, அதேசமயம்... கார்த்தியின் மறுபக்கம் |
நடிகர் விஜய் நேற்று சென்னையில் தனது வீடு அமைந்துள்ள நீலாங்கரை ஓட்டுச்சாவடிக்கு வந்து தனது ஓட்டை பதிவு செய்தார். தற்போது ரஷ்யாவில் கோட் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ஓட்டு அளிக்க வேண்டும் என்பதற்காகவே அங்கிருந்து சென்னை வந்திருக்கிறார் விஜய். மேலும் அவர் ஓட்டுச்சாவடிக்கு வந்தபோது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி மீடியாக்களும் போட்டோகிராபர்களும் விஜய்யை சூழ்ந்து கொண்டார்கள். இதனால் போலீஸ் பாதுகாப்போடு ஓட்டளித்துவிட்டு சென்றார் விஜய்.
இந்த நிலையில் விஜய் மீது சென்னையைச் சார்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்திருக்கிறார். அதில், விஜய் ஓட்டளிக்க வரும்போது தன்னுடன் 200க்கும் மேற்பட்ட ரசிகர்களை அழைத்து வந்தார். இப்படி ஒருவர் மட்டுமே ஓட்டளிக்க 200 பேரை அழைத்து வந்ததால் அந்த ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்க வந்திருந்த பொது மக்களுக்கு இடையூறு ஏற்பட்டது. அதனால் தேர்தல் விதிகளை மீறிய விஜய் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த புகார் அடிப்படையில் விஜய் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பார்களா? இல்லையா? என்பது விரைவில் தெரியவரும்.