23 வருடங்களுக்கு பிறகு பிரசாந்த் - ஹரி கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு | விஜய்யின் ‛லியோ' பட சாதனையை முறியடித்த அஜித்தின் ‛குட் பேட் அக்லி' டிரைலர்! | பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‛கொம்பு சீவி' | சத்யராஜ் பாணியில் கதை தேடும் ‛மர்மர்' நாயகன் தேவ்ராஜ்! | தமிழகத்திற்காக மற்ற மாநிலங்களிலும் ‛குட் பேட் அக்லி' படத்தின் அதிகாலை காட்சி ரத்து! | ரோமியோக்களால் மொபைல் நம்பரை மாற்றிய நடிகை | விரும்பிய கல்லூரியில் சேர குத்துச்சண்டை பழகிய பிரேமலு ஹீரோ | புஷ்பா 2 சம்பவம் எதிரொலி ; ஆர்யா-2 ரீ ரிலீஸான தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு | சன்னி தியோலை நேரில் சந்தித்த பிரபாஸ்: ‛ஜாட்' படத்திற்கு வாழ்த்து | பிரித்விராஜ்க்கு வருமான வரித்துறை நோட்டீஸ் ; எம்புரான் படம் காரணம் அல்ல |
நடிகர் விஜய் நேற்று சென்னையில் தனது வீடு அமைந்துள்ள நீலாங்கரை ஓட்டுச்சாவடிக்கு வந்து தனது ஓட்டை பதிவு செய்தார். தற்போது ரஷ்யாவில் கோட் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் ஓட்டு அளிக்க வேண்டும் என்பதற்காகவே அங்கிருந்து சென்னை வந்திருக்கிறார் விஜய். மேலும் அவர் ஓட்டுச்சாவடிக்கு வந்தபோது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி மீடியாக்களும் போட்டோகிராபர்களும் விஜய்யை சூழ்ந்து கொண்டார்கள். இதனால் போலீஸ் பாதுகாப்போடு ஓட்டளித்துவிட்டு சென்றார் விஜய்.
இந்த நிலையில் விஜய் மீது சென்னையைச் சார்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்திருக்கிறார். அதில், விஜய் ஓட்டளிக்க வரும்போது தன்னுடன் 200க்கும் மேற்பட்ட ரசிகர்களை அழைத்து வந்தார். இப்படி ஒருவர் மட்டுமே ஓட்டளிக்க 200 பேரை அழைத்து வந்ததால் அந்த ஓட்டுச்சாவடியில் ஓட்டளிக்க வந்திருந்த பொது மக்களுக்கு இடையூறு ஏற்பட்டது. அதனால் தேர்தல் விதிகளை மீறிய விஜய் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த புகார் அடிப்படையில் விஜய் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பார்களா? இல்லையா? என்பது விரைவில் தெரியவரும்.