ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா | 4 ஆண்டுகளை நிறைவு செய்த 'மாநாடு' | உங்கள் அறிவுரை தேவைப்படும்போது பெற்றுக் கொள்கிறேன் : ரசிகருக்கு சமந்தா பதில் | தெலுங்கு படமாக இருந்தாலும் கன்னடத்துக்கு முக்கியத்துவம் வேண்டும் : உபேந்திரா | கோவா திரைப்பட விழாவில் சென்னை மாணவியின் ஏஐ படம் | காதலில் விழுந்தாரா 'காந்தா' நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் | வெப் தொடரில் லட்சுமி பிரியா | ஆங்கிலப் படத்தில் இளையராஜாவின் சிம்பொனி | பிளாஷ்பேக் : தமிழ் படத்தில் காட்டு ராணியாக நடித்த பாலிவுட் நடிகை |

பான் இந்தியா அளவில் வெளியீடு என்றால் அதில் தென்னிந்திய அளவில் தெலுங்குப் படங்கள்தான் முன்னணியில் இருக்கிறது. இந்த வருடம் தமிழிலும் சில பிரம்மாண்டப் படங்கள் வெளியாக உள்ளன. ஆனால், அவற்றை வட இந்தியாவில் கொண்டு சேர்க்கும் அளவிற்கு அப்படங்களின் தயாரிப்பாளர்கள் உண்மையாகவே முயற்சிப்பதில்லை. ரஜினி, கமல், விஜய், அஜித் படங்களுக்கும் அதே நிலைமைதான்.
ஆனால், தெலுங்கில் 'பாகுபலி, ஆர்ஆர்ஆர், புஷ்பா' ஆகிய படங்களுக்குப் பிறகு அங்குள்ள முன்னணி நடிகர்களின் படங்கள் ஹிந்தி உரிமை விலையில் அதிக வியாபாரத்தைப் பெறுகின்றன. சமீபத்தில் 'புஷ்பா 2' படம் 200 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.
அடுத்து பிரபாஸ் நடித்து வெளியாக உள்ள 'கல்கி 2898 ஏடி' படம் 100 கோடிக்கும், ராம் சரண் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' படம் 75 கோடிக்கும், ஜுனியர் என்டிஆர் நடித்துள்ள 'தேவரா' படம் 50 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அந்தப் படங்களுடன் ஒப்பிடும் போது தமிழில் ரஜினியின் 'வேட்டையன்', கமல்ஹாசனின் 'இந்தியன் 2', விஜய்யின் 'தி கோட்', அஜித்தின் 'விடாமுயற்சி', சூர்யாவின் 'கங்குவா' ஆகியவை எந்த விலைக்கு போகப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.