22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
சுந்தர் சி இயக்கி, கதாநாயகனாக நடிக்க, தமன்னா, ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்க உருவாகியுள்ள படம் 'அரண்மனை 4'. இப்படத்தின் வெளியீடு ஏப்ரல் 26 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், திடீரென வெளியீட்டை மே 3ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்கள்.
சில தினங்களுக்கு முன்பு படங்களை தள்ளி வைக்கச் சொல்கிறார்கள் என ரெட் ஜெயன்ட் நிறுவனம் மீது நடிகர் விஷால் குற்றம் சாட்டியிருந்தார். அவர் நடித்துள்ள 'ரத்னம்' படம் ஏப்ரல் 26ம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்திற்கும் என்ன நடக்கும் என்று தெரியாது என அவர் கூறியிருந்தார்.
'அரண்மனை 4' படத்தை கம்பெனி பெயர் இல்லாமல் ரெட் ஜெயன்ட் நிறுவனம்தான் வெளியிடுகிறது என்பது கோலிவுட் தகவல். நேற்று நடந்த 'ரத்னம்' பத்திரிகையாளர் சந்திப்பின் போது கூட விஷாலிடம் நீங்கள்தான் தள்ளி வைக்கச் சொன்னீர்களா என்று கேட்ட போது பதறினார்.
“நான் அப்படி எதுவும் சொல்ல மாட்டேன், சிறிய படங்கள் கூட ஓட வேண்டும் என்பது எனது ஆசை. 'அரண்மனை 4' தள்ளிப் போக வேறு ஏதோ காரணம் இருக்கலாம். சுந்தர் சி சார் எனது அண்ணன் போன்றவர்,” என்றார்.