கார்த்திக் சுப்பராஜ் படத்திற்கு இளையராஜா இசை | மேடையில் 'கெட்ட வார்த்தை' பேசி பின் சமாளித்த ராஷ்மிகா | முதல்வர் விஜய்க்கு தனித்தனியே கோரிக்கை வைத்த கமல்ஹாசன், விஷால் | முதல்வர் விஜய் - ரஜினி சந்திப்பு நடக்குமா? | சூரியிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட நடிகர் கொட்டாச்சி | சினிமாவில் நடிக்க மறுக்கும் ரவி மோகன்: எந்தெந்த படங்களுக்கு பாதிப்பு? | சில பல படங்களின் காப்பியா 'கருப்பு'? | 'திருக்குறள்' படத்தின் 2ம் பாகம்: தமிழ், ஆங்கில மொழிகளில் தயாரிக்கப்படுகிறது. | 100 கோடியைக் கடந்த 'கருப்பு' | விஜய் பிறந்தநாளை முன்னிட்டு 'ஜனநாயகன்' ரிலீஸ் ? |

குட்டிப் புலி, கொம்பன், மருது போன்ற கிராமத்து ஆக்ஷன் படங்களைக் ரசிகர்களுக்கு தந்தவர் இயக்குனர் முத்தையா. இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த 'காதர் பாட்சா என்கிற முத்துராமலிங்கம்' என படம் பெரிதளவில் தோல்வி அடைந்தது. இதனால் இவருக்கு அடுத்து எந்த முன்னனி நடிகர்களின் கால்ஷீட்டும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் தனது இயக்கத்தில் தன் மகன் விஜய் முத்தையாவை கதாநாயகனாக அறிமுகபடுத்தி புதிய படம் ஒன்றைக் இயக்குவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தார். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்றதாக கூறப்பட்டது. இப்போது இந்த படத்திற்கு 'சுள்ளான் சேது' என தலைப்பு வைத்துள்ளதாக முதல் பார்வை போஸ்டர் உடன் இன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அறிவித்துள்ளனர்.